"அலைகள் ஓய்வதில்லை.. பாறைகளும் உடைவதில்லை" பச்சை பட்டுடுத்தி.. எம்புட்டு நாளாச்சுக்கா குரலை கேட்டு!
சவால்களை எதிர்கொள்வோம் என்று தமிழிசை சவுந்தராஜன் வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்
சென்னை: "அக்கா உன் குரலை கேட்டு எம்புட்டு நாளாச்சு... நீங்க க்யூட்டா மாறிட்டீங்க, உங்க ஹேர் ஸ்டைல் ஆல்சோ க்யூட்.. நம்ம ஊரு பக்கம் கொஞ்சம் தலைய காட்டுங்க தெய்வமே" என்று ட்விட்டர்வாசிகள் தமிழிசை சவுந்தராஜனை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்!!
Recommended Video
அக்கா, அக்கா என்று பாசத்துடன் அடைமொழி வைத்து கட்சிக்கும் அப்பால் தமிழக மக்களால் அழைக்கப்பட்டவர் டாக்டர் தமிழிசை சவுந்தராஜன்! இவர் தெலுங்கானா ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்து தமிழக பாஜக சோர்ந்து போயுள்ளது.
இந்நிலையில் இவர் ஒரு வீடியோ பதிவினை ட்விட்டரில் போட்டுள்ளார். பச்சை கலர் பட்டுப்புடவையில் பளிச்சென உள்ளார் தமிழிசை.. ஒரு தத்துவ கதையையும் சொல்கிறார்.
அதில், "ஒரு ஞானி தன் சீடர்களோடு கடற்கரைக்கு செல்கிறார்.. அவர்களிடம் கேட்கிறார், என்ன பார்க்கிறீர்கள் என்று.. சீடர்கள் சொல்கிறார்கள் அலைகளை பார்க்கிறோம், பாறைகளை பார்க்கிறோம் என்றார்கள்.
அதற்கு ஞானி, "இந்த அலைகள் தொடர்ந்து பாறைகளில் முட்டி மோதுகிறது.. இந்த பாறைகளை எப்படியாவது அடித்து உதைத்து விட வேண்டும் என்று தொடர் முயற்சி செய்கிறது.. ஆனால் இந்த பாறைகளோ விட்டுக் கொடுத்துவிட மாட்டோம், உடைந்துவிட மாட்டோம் என்று உறுதியாக நிற்கிறது.. ஆக தொடர்ந்து அலைகள் அடித்து கொண்டிருக்கிறது.
பாறைகளும் உறுதியாக இருக்கிறது, விடாமுயற்சியில் அலைகளாக இருப்போம், உறுதி தன்மையில் பாறைகளாக இருப்போம் என்று சீடர்களிடம் சொல்கிறார். அதுபோல நாமும் தொடர்ந்து முயற்சித்து கொண்டிருக்கும் அலைகளாக இருப்போம், சவால்களை எதிர்கொள்வதிலும், உறுதிதன்மையிலும் பாறைகளாக இருப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
நிமிரவைக்கும் ஒரு நிமிடத்தகவலில்
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) April 28, 2020
இன்று...
அலைகளும் ஓய்வதில்லை...
பாறைகளும் உடைவதில்லை... pic.twitter.com/K0aYdSDJoU
தமிழிசை எதற்காக இந்த வீடியோவை பதிவிட்டார் என்று தெரியவில்லை.. ஆனால் அவர் தெரிவித்த பாறை, அலைகள் கருத்துக்களை கூட நெட்டிசன்கள் பெரிதாக பார்க்கவில்லை.. "அக்கா, உன் குரலை கேட்டு எம்புட்டு நாளாச்சு" என்றும் அக்கா நீங்க தமிழ் இசை கிடையாது, தமிழ் புயல் என்றும், அக்கா நீங்க க்யூட்டா மாறிட்டீங்க, உங்க ஹேர் ஸ்டைல் ஆல்சோ க்யூட்.. "நம்ம ஊரு பக்கம் கொஞ்சம் தலைய காட்டுங்க தெய்வமே" என்றும் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.
இதில் ஒருவர் மட்டும், "அந்த ஞானியின் பார்வை தவறு!! அலைகள் பாறை மீது மோதுவது பாறைகளை உடைப்பதற்காக அல்ல!! அந்த அலைகள் தினமும் பாறைகளை அன்புடன் தழுவி கொஞ்சுகிறது!! நாம் எல்லாவற்றையும் ஏன் வன்முறையாக பார்க்க வேண்டும்!! ஒரு ஞானிக்கு இதுகூட தெரியாதா??" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இன்னும் பலரோ, "அக்கா நலமா... ஆனால் தாமரை மலர தமிழகத்தில் நீர் இல்லை.. வேண்டும் என்றால் , எங்களுக்கு படர்தாமரை மலர வாய்ப்பு உள்ளது அக்கா" என்று பதிவிட்டு வருகின்றனர்.