என் கூடவே வா.. தோழனாக.. தோழியாக!
என் முன்னாடி நடக்காதே.. என்னால் உன்னை பின் தொடர முடியாது.. எனக்குப் பின்னால் வராதே.. என்னால் உன்னைத் தலைமை தாங்கிக் கொண்டு செல்ல முடியாது.. எனக்கு சமமாக நடந்து வா.. ஒரு தோழனாக, தோழியாக.. இப்படி ஒரு வாக்கியம் ஆங்கிலத்தில் உண்டு.
உண்மைதான்.. வாழும் இந்த வாழ்க்கையில் அனைவருமே சமம்தான்.. சமத்துவமாகவே நாம் இந்த வாழ்க்கையை வாழ வேண்டும். அதை விட முக்கியமாக ஒரு நல்ல தோழியோ அல்லது தோழனோ இல்லாத வாழ்க்கை.. அது என்ன வாழ்க்கை.. நல்ல தோழர்கள் இல்லாத யாருமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது என்று கூட சொல்லலாம்.
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாய்ஞ்சுக்கணும் என்பது போல ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு நண்பர் தேவை. உயிருக்கு உற்றத் தோழனாக ஒருவர் நிச்சயம் வேண்டும். உங்கள் பெற்றோரிடமும் ஏன் மனைவியிடமும் சொல்ல முடியாததைக் கூட நண்பர்களிடம் நம்மால் சொல்ல முடியும்.
நல்ல நண்பன் இருந்தால் ஒருவனுக்கு அதைவிட பெரிய சொத்து எதுவுமில்லை. எந்தவொரு இரத்த பந்தமும் இல்லாமல் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி நிற்பவர் நமது நண்பர் மட்டுமே. நம்முடைய சுகதுக்கங்களை அவருடையது போல் பாவிக்க நண்பர்களால் மட்டுமே முடியும்.
பிரபல பாடகர் எஸ்.பி.பி அவர்களின் நண்பர் இசைஞானி இளையராஜா ஆவார். நண்பர்களுக்குள்ளே சண்டை வருவது சகஜம் தான். ஆனால் தன் நண்பன் உயிருக்குப் போராடுகிறான் என்று தெரிந்தவுடன் பாலு சீக்கிரம் வா உனக்காக நான் காத்திருக்கிறேன் நம்முடைய நட்பு தொடர வேண்டும் என்று இசைஞானி அழைத்தார். அதோடு நில்லாமல் நண்பனின் நலனுக்காகப் பிரார்த்தனையும் செய்தார். இப்பொழுதும் நண்பனின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று திருவண்ணாமலையில் மோட்சதீபம் ஏற்றி வழிபடுகிறார்.
தீராத கடன், நோய் தீர்க்கும் ருண விமோசன பிரதோஷம் - இன்று சிவ தரிசனம் செய்வதால் என்ன நன்மை
நட்பின் சிறப்பைப் பற்றித் திருவள்ளுவர் ஒரு அதிகாரத்தையே எழுதியுள்ளார். உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்பது போல நல்ல நண்பர்கள் நம்முடன் எப்போதும் இருக்க வேண்டும். நண்பர்களோடு மகிழ்ச்சியாக இருங்கள். உங்களுக்கென உருகும் ஜீவன் அவர்கள் தான்.