கண்டதும் வருவதுதான் காதலா!
காதல் எப்போ வரும் எப்படி வரும்னு சொல்லவே முடியாது.. ஆனால் வர வேண்டிய நேரத்துல கரெக்டா வரும்.. நம் மனசு யார் மீது அதீதமாக பாய்ந்து பரவசம் அடைகிறதோ.. அதுதான் காதல்.
சிலருக்கு யாரைப் பார்த்தாலும் காதல் உணர்வு வரும்.. அதை காதல் உணர்வு என்றே எடுத்துக் கொள்ள முடியாது. சிலருக்கு குறிப்பிட்ட சிலர் மீது மட்டுமே அந்த உணர்வு தென்படும்.. அப்படிப்பட்டதைத்தான் நாம் காதல் என்று வகைப்படுத்தலாம்.
கண்டதும் காதல் கொண்டதும் மோகம் என்பார்கள். பார்த்தவுடன் வருவது காதல் அல்ல அது ஒரு விதமான ஈர்ப்பு அவ்வளவே. நம் மனது யாரைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறதோ அது தான் காதல். இந்தக் காதலில் தான் எத்தனை வகைகள். காதல் ஆறு வகைப்படும்.
காதல் பாடல் பாடி ஆடி மகிழ்ந்துக் கொண்டிருக்கிறீர்களா. உணர்ச்சிகள் மிகுந்த வரிகளைக் கேட்கும் போது உள்ளம் பூரிப்படைந்தால் உங்கள் காதலில் உள்ளத்திற்கும் உணர்ச்சிகளுக்கும் சிறந்த பங்குண்டு. இருவரில் ஒருவர் தான் ஆதிக்கம் செலுத்த முடியும். இவ்வகையான காதல் மன்மதக் காதல் என்பர்.
ஒருபெண் தினமும் கூட்டத்தோடு செல்கிறாள் அவள் உங்களைக் கவனிக்க வேண்டும் என்பதற்காக அவளைக் காதலிப்பது கவன ஈர்ப்பு காதல். இவ்வகையான காதல் அதிக நாட்கள் நீடிக்காது. ஏனென்றால் இருவரும் ஒருவரையொருவர் ரசிப்பீர்கள் ஆனால் தனிமையில் சந்திக்க வேண்டும் என்றால் அவள் வர மாட்டாள்.
ஒரு பெண்ணின் மீது நட்பு பாராட்டுதல் சேமிப்புக் காதல் ஆகும். அந்தக் காதலில் இவளைப் போல் ஒரு காதலி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். இது தான் சேமிப்புக் காதல். அடிக்கடி சின்ன சின்ன சீண்டல்கள் மற்றும் தீண்டல்களோடு இனிமையான பேச்சுகளோடு இருக்கும் காதல். இது இனிப்புக் காதல் ஆகும். இந்தக் காதலில் இருப்போரின் அன்பு இறுதிவரை குறையாது.
நவராத்திரி 2020: நவராத்திரியின் ஒன்பது நாட்களும் என்ன அலங்காரம் எப்படி வழிபடுவது
பேச ஆரம்பித்த நாள் முதல் உங்கள் காதல் பாதையை உங்கள் துணையுடன் திட்டமிட்டுச் செயல்படுத்துவது திட்டக் காதல். உங்கள் காதலி போனில் உடல்நிலை சரியில்லையென்றால் உடனே நீங்கள் அவர்களின் வீட்டிற்குச் சென்று உடனே பார்க்கிறீர்கள் அவரும் உங்கள் மேல் அதீத அன்பு இருக்கிறார்கள் என்றால் அது வெற்றிக் காதல் ஆகும்.
ஆதலால் காதல் செய்யுங்கள். காதல் என்பது அன்பை மட்டும் பரிமாறிக்கொள்வதல்ல இரு மனங்களின் சங்கமம். காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள். புறத்தோற்றம் பார்த்து வருவது காதல் அன்று அகத்தோற்றம் பார்த்து வருவதே உண்மையான காதல். உள்ளம் உருகி காதலியுங்கள். வாழ்வில் தென்றல் வீசட்டும்.