மார்ச் 22-ல் தாஜ் மஹாலை பார்வையிடுகிறார் கிளிண்டன்
லக்னோ: இந்தியா வரும் அமெக்க அதிபர் பில் கிளிண்டன், மார்ச் 22-ம் தேதி, ஆக்ராவிலுள்ள உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹாலுக்கு வருகை தருவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உத்தரபிரதேச மாநல அரசின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தாஜ் மஹாலுக்கு வருகை தரும் கிளிண்டன், அன்று இரவு ழுவதும் அங்கு தங்கியிருந்து நலவொளியில் தாஜ் மஹாலின் அழகை ரசிப்பார் என்று நிம்புகிறோம்.
ஆக்ராவில் சில மணி நேரம் மட்டுமே கிளிண்டன் தங்குவதாக தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. ஆக்ரா பயணத்திற்குப் பிறகு கிளிண்டன் ஜெய்ப்பூர் செல்வார். அங்கு இரவு தங்குகிறார். இருப்பினும் ஜெய்ப்பூல் தங்குவதற்குப் பதில் ஆக்ராவிலேயே இரவில் கிளிண்டன் தங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு அமெக்க அதிகாகளுக்கு உ.பி. அரசு கோக்கை விடுத்துள்ளது. இதன் லம் உலகப் புகழ் பெற்ற தாஜ் மஹாலை இரவில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று அது கூறியுள்ளது.
இரவு நேரங்களில் தாஜ் மஹாலைப் பார்ப்பதற்கு உச்சநீதிமன்றம் தற்போது தடை விதித்துள்ளது. இத்தடையை நீக்க வேண்டும் என்று கோ, நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.