வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
விசாரணைக் கைதிகளை வெட்டிக் கொன்றகூலிப்படையினர் இருவர் சுட்டுக்கொலை
சென்னை:
கடலூல் விசாரணைக் கைதிகள் இருவரை கோர்ட்டிலிருந்து ஜெயிலுக்கு அழைத்துச் சென்ற போது கூலிப்படையினர் அவர்களை வெட்டிக் கொன்றனர். இதையடுத்து அந்த கூலிப் படையினர் இருவரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர்.
இந்த பயங்கர சம்பவம் கடலூர் அருகே அழகப்பா ரயில்வேகேட் பகுதியில் வியாழக்கிழமை நிடந்தது.
திருவள்ளுவன் மற்றும் சங்கர் ஆகிய இருவர் விசாரணைக் கைதிகள். கொலை வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்டது தொடர்பாக இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் அங்குள்ள ஜெயிலுக்கு அழைத்து வந்த போது பன்னீர் மற்றும் மணிமாறன் ஆகிய இரண்டு கூலிப்படையினர் விசாரணைக் கைதிகளை வழிமறித்து சராமயாய் வெட்டிக் கொலை செய்தனர்.
இதையடுத்து போலீசார் பன்னீரையும், மணிமாறனையும் நிாேக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர்கள் இருவரும் குண்டு பாய்ந்து இறந்தனர்.
கண்ணிமைக்கும் நிேரத்தில் நிடந்து டிந்து விட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யு.என்.ஐ.