வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
புகார்களை நரூபிக்காவிட்டால் அரசியலிலிருந்து விலகத் தயாரா: வாழப்பாடிக்கு பா.ம.க அமைச்சர் சவால்
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் மீது, தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமதாஸ் கூறியுள்ள புகார்கள் அனைத்திலும் உண்மையில்லை. அவரது புகார்களை பொய் என்று நரூபித்தால், அரசியலிலிருந்து விலக வாழப்பாடி தயாரா என்று மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் என்.டி.சண்கம் கூறியுள்ளார்.
பா.ம.க தலைவர் டாக்டர் ராமதாஸ் மீதும், அவரது கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மீதும், தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமர்த்திஊழல் குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார். ஓர் அணியில் இருந்து கொண்டு வாழப்பாடி ராமர்த்தி சுமத்திய குற்றச்சாட்டுகளால் தமிழகத்தில் திக தலைமையிலான தேசிய ஜனநிாயக கூட்டணியில் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் வாழப்பாடியின் பேச்சுக்குக் கண்டனம் தெவித்து தமிழகத்தில் பல இடங்களில் பா.ம.கவினர் போராட்டங்கள் நிடத்தினர்.
இந்தப் புகார்களை மறுத்து சென்னையில் அமைச்சர்கள் என்.டி.சண்கம், பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் பொன்னுசாமி ஆகியோர் பேட்டியளித்தனர். அவர்கள் கூறுகையில், சுகாதாரத் துறை அமைச்சர் அறையில் ராமதாஸ் மகன் அன்புமணிக்கு தனி இடம் கொடுக்கப்பட்டுள்ளதாக வாழப்பாடி கூறியுள்ளார். இதில் கிஞ்சித்தும் உண்மையில்லை. இதை அவர் நரூபிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அரசியலிலிருந்து விலக வேண்டும்.
மத்திய பா.ம.க அமைச்சர்கள் பெயரளவுக்குத்தான் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்றும், அவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ராமதாஸ்தான் என்றும் வாழப்பாடி அபாண்டமாக கூறியுள்ளார். இதிலும் உண்மை இல்லை.எங்களது செயல்பாட்டில் ராமதாஸ் தலையிடுவதே கிடையாது.
வாழப்பாடி ஒரு விளம்பரப் பியர். தனது பெயர் பத்திகைளில் வர வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் கூறுவார். பல தோல்விகளைச் சந்தித்துள்ளால் விரக்தியில் மன நிாேயாளி போல பேசுகிறார். அமைச்சர் பதவியை அனுபவித்த சுகம் காரணத்தாலும், இப்போது சும்மா இருப்பதாலும் அவர் விரக்தியில் ராமதாஸ் மீதும் அவரது குடும்பத்தினர் மீது பொய்யான புகார்களைக் கூறி வருகிறார்.
எய்ட்ஸ் நிாேய் ஒழிப்புக்காக வெளிநிாட்டில் வந்த நதியை எனது துறை விரைவிலேயே செலழித்து விட்டதாக அவர் கூறியுள்ளதிலும் உண்மையில்லை. நிான் அமைச்சர் பதவி ஏற்றதிலிருந்து இதுவரை எய்ட்ஸ் நிாேய் ஒழிப்பு தொடர்பான எந்த பைலும் என்னிடம் வரவில்லை.
ராமதாஸின் சம்பந்தி ராஜசேகர் மருத்துவ உலகில் பல சாதனைகளை புந்தவர். அந்த அடிப்படையில்தான் அவருக்கு மருத்துவ தேர்வு வாய தலைவர் பதவி தரப்பட்டது.
இன்னொரு சம்பந்தி கிருஷ்ணசாமி மகன், ஆறு ஆண்டுகளாக மருந்துக் கம்பெனியின் சூப்பர் ஸ்டாக்கிஸ்டாக இருக்கிறார். அவர் அரசுக்கு மருந்து சப்ளை செய்வதில்லை என்றார் அவர்.