வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
"தி சிக்ஸ்த் சென்ஸ் --பட இயக்குனர் மனோஜ்ஷியாமளனுக்கு ஆஸ்கார் விருதைப் பெற்றுத் தருமா?
லாஸ் ஏஞ்சலீஸ்:
உலகம் ழுவதும் திரைப்படத் துறையில் இருப்பவர்களின் கனவு எப்படியாவது ஆஸ்கார் விருது வாங்கிவிடவேண்டும் என்பதுதான். இவ் விருது இது வரை இந்திய திரைப்படத்துறையினருக்கு எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது.
அத்தைகய ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெக்காவில் லாஜ் ஏஞ்சலீஸ் நிகல் ஞாயிற்றுக்கிழமை நிடைபெறுகிறது.
இந்த விருதுக்கு போட்டிகளுக்கு இந்தியத் திரைப்படங்கள் எதுவும் அனுப்பப்படவில்லை. என்றாலும், இந்தியாவில் பிறந்து தற்போது அமெக்காவில் வசித்து வரும் மனோஜ் நிைட் ஷியாமளன் என்ற இந்தியன் "தி சிக்ஸ்த் சென்ஸ் என்ற படம் சிறந்த படம், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட பல பிவுகளில் ஆஸ்கார் விருதுக்குப் போட்டியிடுகிறது.
சில மாதங்களுக்கு ன் உலகம் ழுவதும் திரையிடப்பட்ட இப் படம் அதிக வசூலை வாக்குவித்தது. வசூலுடன் நில்ல படம் என்ற பெயரையும் சம்பாதித்தது. இத்தகைய சிறப்புகளுடன் இப் படத்துக்கு ஒரு ஆஸ்கார் விருது கிடைத்தாலே ஆஸ்கார் விருது பெற்ற தல் இந்தியர் என்ற சிறப்பு ஷியாமளனுக்குக் கிடைக்கும்.
ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட பிவுகளில் இப் படத்துக்கு விருது கிடைக்கும் என்று கணிக்கப்பட்டாலும், சிறந்த திரைக்கதைக்கு நச்சயம் விருது கிடைக்கும் என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர். ஷியாமளனின் தி சிக்ஸ்த் சென்ஸ் திரைப்படத்துடன், அமெக்கன் பியூட்டி, தி இன்சைடர், சைடர் ஹவுஸ் ரூல்ஸ், பீயிங் ஜான் மால்கோவிச் போன்ற கடந்த ஆண்டின் நில்ல படங்களும் பல பிவுகளில் ஆஸ்கார் விருதுக்குப் போட்டியிடுகின்றன.
இந்தியாவின் சத்யஜித் ரேக்கு வாழ்நிாள் சாதனையாளருக்காக சிறப்பு ஆஸ்கார் விருது கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், வெளிநிாட்டுப் படங்களுடன் போட்டியிட்டு விருது பெற இதுவரை எந்த இந்தியப் படங்களும் தகுதி பெறவில்லை. அதே நிேரத்தில் ஆண்டுதோறும் ஆஸ்கார் விருதுக் கமிட்டி பசீலனைக்கு சில இந்தியப் படங்கள் அனுப்பட்டு வருகின்றன. ரோஜா, இந்தியன், பம்பாய், அபூர்வ சகோதரர்கள் போன்ற தமிழ்ப் படங்கள் உள்பட நறைய இந்தியப் படங்கள் ஆஸ்கார் விருதுக் கமிட்டி பசீலனைக்கு அனுப்பப்பட்டன. ஆனால், விருதுக்குய பிவுகளில் போட்டியிட அவை தேர்வு செய்யப்படவில்லை.
இந் நலையில், விருதுக்குய பிவில் போட்டியிட்ட ஷியாமளனுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தால் அது இந்தியாவுக்கே குறிப்பாக தமிழகத்துக்குக் கிடைக்கும் பெருமையாகும். ஆஸ்கார் விருது பெற்ற தல் இந்தியர் என்ற பெயரும் ஷியாமளனுக்குக் கிடைக்கும்.
சமீபத்தில் வெளியான தி சிக்ஸ்த் சென்ஸ் திரைப்படம் இதுவரை 250 மில்லியன் டாலர் அளவுக்கு வசூலை வாக் குவித்துள்ளது. இது ஹாலிவுட் திரைப்பட வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த திரைப்படங்கள் வசையில் 15-வது இடத்தை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே அன்பிரேக்கபிள் என்ற தனது அடுத்த திரைப்படத்தை எழுதி, இயக்க 10 மில்லியன் டாலருக்கு டிஸ்னி திரைப்பட நறுவனத்துடன் ஷியாமளன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளார். இப் படத்தில் புரூஸ் வில்லிஸ், சாவேல் எல். ஜாக்சன் உள்ளிட்டோர் நிடிக்கின்றனர். ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.