வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஸ்காட்லாண்டைக் கலக்கிய ஐஸ்வர்யா ராய்
உலகப் பேரழகி ஐஸ்வர்யா ராய் இந்தியில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தாலும் தமிழில்தான் இவர் கவனம் அதிகமாக உள்ளது. சென்னையில் முகாமிட்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் கலைப்புலி தாணுவின், கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிப்பவர் அப்பாஸ். இவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி ஒன்றை துப்பறிதலுக்கு பெயர் பெற்ற ஸ்காட்லாண்டில் படமாக்கியுள்ளார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு, வைரத்து எழுதிய வரிகளுக்கு, அப்பாஸ் வாயசைத்துப் பாட, ஐஸ்வர்யா ஆட, அந்தக் காட்சிகளை, ஹாலிவுட்காரர்களே, வியக்கும் வகையில் வித்தியாசமான யுக்தியில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ரவி.கே.சந்திரன் (இவர்தான் கமல்ஹாசனின் மருதநாயகத்தின் கேமராமேன்).
சூட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்த ஸ்காட்லாண்ட் மக்கள் ஐஸ்வர்யா ராயின் அழகைப் பார்த்து பிரமித்துப் பாய் விட்டார்களாம். உலகையே கலக்கும் ஐஸ்- ஸ்காட்லாண்டையே கலக்கி விட்டாராம்.
அஜீத்தின் சந்தோஷம்
உன்னைக் கொடு என்னைத் தருவேன் படத்தில் அஜீத் ஒரு மிலிட்டரி ஆபிசர். அதற்காக தன் நீண்ட முடிகளை ஒட்ட வெட்டிக் கொண்டு, ஒரு மாதம் ஊட்டியில் உள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சிப் பள்ளியில் நடந்த படப்பிடிப்பில் நடித்து விட்டு வந்திருக்கிறார். அங்கே பயிற்சிக்காக வந்திருக்கிற ஆபிசர்கள் உண்மையான ராணுவ வீரர்களைப் போல, துப்பாக்கி தூக்கி சல்யூட் அடித்து நடித்ததைதப் பார்த்து பாராட்டினார்களாம் . சந்தோஷமாக இருந்தது என்று மிகவும் பெருமயுடன் சொன்னார். இந்தப் படத்தில் அஜீத் ஜோடியாக நடிப்பவர் சிம்ரன்.
சைட்போஸில் நோ!
தன் பல் வரிசை கொஞ்சம் எடுப்பாக இருப்பதால் சைட் போஸில் போட்டோ எடுக்க மீனா அனுமதிப்பதில்லை. சினிமாவில் ஓரிரு காட்சிகள் இடம் பெற்று விடுவதை அவரால் தவிர்க்க முடிவதில்லையாம். பல்லை சீராக உரசி சரி பண்ணிய பிறகுதான் கதாநாயகியாக நடிக்க வந்தார்.
வெற்றிக் கொடி கட்டு
எம்.ஜி.ஆர். பாடிய, என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்ற பாடலில் பிறந்த கதைதான் சேரன் இயக்கும் வெற்றிக் கொடி கட்டு. ஆனால் ரஜினி படையப்பாவில் பாடிய வெற்றிக் கொடி கட்டு என்ற பாடல் வரியைத் தலைப்பாக்கி விட்டார், தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன்.
கவுண்டமணியா, கமெண்ட் மணியா?
நகைச்சுவை நடிகர் விவேக் சமீபகாலமாக நகைச்சுவையால் பிரபலமாகி வருகிறார். பலரும் எம்.ஆர்.ராதா பாணியில் அசத்துராரு என்கிறார்கள். கமெண்ட் அடிப்பதில் பிரபலமாகி, கவுண்டமணியானவராயிற்றே, கவுண்டர். சும்மா இருப்பாரா - இந்தா பாரு, நீ சொல்லும் போதே ராதா அண்ணே மாதிரி அசத்துராருன்னுதானே சொன்னே. அப்படி ஒரு பேச்சே வரக் கூடாது. அதுக்குப் பேரு காமடியல்ல. காப்பி. இதுவரைக்கும் என்னோட காமடியைப் பற்றி அவருமாதிரி இவருமாதிரின்னு யாராவது சொன்னாங்களோ, அப்படி ஒரு பேச் சு வரக் கூடாது. நிான் பொறாமையில் இதைச் சொல்லவில்லை. நியாயத்தைத்தான் சொல்றேன் என்கிறார்.
ஒருவர் மனதில் ஒருவரடி
கோவை செழியன் நீண்ட இடைவெளிக்குப் பின் படம் தயாரிக்க வருகிறார். படத்திற்கு ஒருவர் மனதில் ஒருவரடி என்ற பெயரில் கார்த்திக் புதுமுகம் ரேணு தேசாய் நடிக்க சமீபத்தில் பூஜை போடப்பட்டது. கோவை செழியன் தங்கக் கொலுசு என்ற பெயரில் ஒரு படம் தயாரித்தார். அந்தப் படம் ரிலீசாகாமல் அப்படியே பொட்டியில் போட்டு மூடி வைத்து விட்டார்.
இளையராஜா இப்போ பிஸி
பொங்கலுக்கு வெளி வந்த நான்கு படங்களில் தேவா இசையில் ஒரு படம் இல்லை. வானத்தைப் போல, கண்ணுக்குள் நிலவு, திருநெல்வேலி, காதல் ரோஜாவே இந்த நான்கு படங்களில் வானத்தைப் போல, எஸ்.ஏ.ராஜ்குமார். மற்று மூன்று படங்களும் இளையராஜா.
மற்றபடி, ஏ.ஆர்.ரகுமான், தேவா இருவருக்கும் நோ சினிமா பொங்கல். விரைவில் வெளிவரத் துடிக்கும் அலைபாயுதே, கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் இரண்டும் ஏ.ஆர்.ரகுமான். அஜீத் நடித்து வெளிவந்த முகவரிக்குத் தேவா. ஹே ராம் படத்துக்கு இளையராஜா. பொங்கலுக்கு வெளி வந்த வானத்தைப் போல, பாடல்கள் அத்தனையும் சூப்பர்ஹிட். சமீபத்தில் வெளிவந்த முகவரி படத்துக்கு மட்டும் தேவா. தேவாவின் இடத்தை எஸ்.ஏ.ராஜ்குமார் பிடித்து விட்டார் என்றே சொல்லலாம். போகிற போக்கில் பார்த்தால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட அடுத்த படத்தில் எஸ்.ஏ.ராஜ்குமாருக்குத்தான் என்று கோடம்பாக்கம் பட்சி ஒன்று குறி சொல்கிறது.
நியூகாலேஜில் நடந்த உண்மைக் கதை
நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த் சொந்தப்படம் உனக்காக மட்டும் கதை, நியூகாலேஜில் அவர் படித்த காலத்தில் நடந்த உண்மைக் கதையாம். 1985-ல் ரஜினிகாந்த் நடித்த கை கொடுக்கும் கை படத்தில் அறிமுகமான சின்னி ஜெயந்த் சுமார் 300 படங்களில் நடித்து முடித்து விட்டார். ஏற்கனவே சின்னப்புள்ள என்ற ஒரு படத்தைத் தயாரித்த இவர், உனக்காக மட்டும் படத்தில் கதை எழுதி நடிக்கவும் செய்கிறார்.
அரவிந்தசுவாமியின் அல்பாயுசு படங்கள்
என் சுவாசக் காற்றே - அரவிந்தசவாமி நடித்து வெளிவந்த கடைசிப் படம். மணிரத்தினத்தின் கண்டுபிடிப்பான அரவிந்தசுவாமி, உண்மை வாழக்கையில் மிகப் பெரிய தொழிலதிபர். இவருக்கு சினிமாவில் நடித்துத்தான் வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இவர் கரிஷ்மா கபூருடன் இணைந்து தல் தலாக என்ற பெயரில், அழகம் பெருமாள் டைரக்ட் செய்வதாக தாஜ் ஹோட்டலில் பிரம்மாண்டமாக பூஜை போட்டார்கள். அந்தப் பூஜையுடன் படம் நின்று விட்டது. இன்ஜீனியர் என்ற பெயரில் காந்தி கிருஷ்ணா டைரக்ட் செய்ய, மாதுரி தீட்சித் நடிக்க, 80 சதவீத படம் வளர்ந்த நிலையில் அப்படியே நிற்கிறது. மகேந்திரன் டைரக்ஷனில் அரவிந்த சுவாமி நடிக்க, சாசனம் என்ற படம் முடிந்தும், இன்னும் ரிலீசாகவில்லை.
ஏப்ரல் 24-ல் அஜீத்-ஷாலினி திருமணம்
ஷாலினி- நடித்த நிறம் என்ற மலையாளப் படத்தை கமல் டைரக்ட் செய்தார். படம் கேரளாவில் சக்கைப் போடு போட்டது. இந்தப் படத்தை தமிழில் தயாரிக்கும் எண்ணத்தில் உரிமையைப் பெற்று, பிரியாத வரம் வேண்டும் என்று பெயரிட்டு பிரசாந்த்-ஷாலினி ஜோடி நடித்தார்கள். மலையாளப் படத்தை டைரக்ட் செய்த கமல் (கமாலுதீன்) தன் முறையாக இந்தத் தமிழ் படத்தை டைரக்ட் செய்தார். ஒரே மூச்சில் படப்பிடிப்பை முடித்து விட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் என்ன காரணமோ, படப்பிடிப்பு நின்று விட்டது. பைனான்ஸியர் காணாமல் போய் விட்டதாக சொல்லப்படுகிறது.
ஏப்ரல 24-ம் தேதி ஷாலினி, அஜீத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. அதற்குள்ளாக, ஷாலினி சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துக் கொள்ளும்படி தயாரிப்பாளர் கிருஷ்ண ரெட்டியிடம் சொல்லி விட்டார். திருமணத்திற்குப் பிறகு ஷாலினி திட்டவட்டமாக நடிக்க மாட்டார் என்பதையும் சொல்லி விட்டாராம்.
வயது ஓ.கே. உயரம் நோ...
பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணியவுடன் நடிக்க வந்து விட்டார் ரியா சென். வயதைக் கூட சொல்வார், உயரத்தை மட்டுமே சொல்ல மாட்டார். அரை அடி உயர ஷூ போட்டுள்ளார். இவர் வயது ஜனவரி 24-ம் தேதி பர்த்டே. இந்தியில் லவ் யூ அமேஸா என்ற ஒரு படத்தில் நடிக்கிறார். மற்றும் இரண்டு படங்கள் ரிலீஸ் நிலையில் உள்ளதாம்.முதலில் காமிரா முன்னால் நின்றது என்னவோ, இந்திப் படம்தான் என்றாலும், ரிலீஸானது தாஜ்மஹால். ஆனால் நாளது தேதி வரை, தாஜ்மஹால் பார்க்கவில்லை என்கிறார். இதுவரை தமிழ்ப் படம் எதுவுமே பார்த்ததில்லை என்று சொல்லும், ரியா சென் நடித்து இரண்டாவது படம் குட்லக் வெளிவந்து, வந்த வேகத்தில் தியேட்டர்களை விட்டே ஓடிவிட்டது.
பேமிலி பேக்ரவுண்ட், அப்பா பாரத் தேவ் சினிமா சம்பந்தமே இல்லாதவர், ஒரு அக்கா, ரெய்மா சென் அவரும் சினிமாவில் நடிக்கிறார். பாட்டி சுஷ்மிதா சென் - அம்மா முன் முன் சென்- இப்போதும், பாட்டி, அம்மா, எல்லோருமே நடித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.
ஜெனீஷா, ஷோபனா, அபிதா
சேது படத்தில் அறிகமாகி, இன்று லைம் லைட்டின் வெளிச்சத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர் அபிதா. இவருக்கு, வீட்டில் வைத்த பெயர் ஜெனிஷா. சேது படத்தில் இவரை புக் செய்த பாலா, ஷோபனா என்று பெயர் வைத்தார். இடையில் படப்பிடிப்பு நின்று போனதால் - கோல்மால் என்ற பெயரில் செல்வா டைரக்ட் செய்த படம், மற்றும் மலையாளப் படங்களில் படு செக்ஸியாக நடித்தார். மீண்டும் சேது படப்பிடிப்பு தொடஙகவே, அந்தப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயரையே மாற்றி வைத்துக் கொண்டார். படம் வெளி வந்து நன்றாக ஓடவே, இப்போது, அபிதாவாக தன் பெயரை வைத்துக் கொண்டு விட்டார்.
சிகரத்தின் பார்வை இளைஞர்களின் மீது
வெற்றிப் படம் கொடுக்கும் இளம் டைரக்டர்களைக் கொத்திக் கொண்டு போக, சினிமா உலகில் ஒருவர் காத்திருக்கிறார். அவர் யார் தெரியுமா, டைரக்டர் கே. பாலச்சந்தர் - காதல் கோட்டை வெற்றிக்குப் பிறகு பின் டைரக்டர் அகத்தியனை அழைத்து விடுகதை வாய்ப்புக் கொடுத்தார். லவ் டுடே வெற்றிக்குப் பின் டைரக்டர் பாலசேகரனை அழைத்து துள்ளித் திரிந்த காலம் கொடுத்தார். இப்படி வெற்றிகளை கொடுப்பவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கும் சிகரம் - இப்போது சேது பட இயக்குநர் பாலாவுக்கு வலை வீசி வருகிறாராம்.