For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காரைக்கால் சிறையிலிருந்து 2 விசாரணைக் கைதிகள் தப்பினர்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி மாநிலத்திற்குட்பட்ட காரைக்காலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு விசாரணைக் கைதிகள் செவ்வாய்க்கிழமை அங்கிருந்து தப்பினர். இருவரும் தங்களது முகத்தை போர்வையால் மூடிக் கொண்டு தப்பியதாக சிறைக் காவலர்கள் தெரிவித்தனர்.
தப்பிய கைதிகள் ராஜசுந்தரம் மற்றும் மயில்வாகனன் ஆகிய இருவரும் போலீஸ்காரர்கள். மொத்தம் 27 வழக்குகளில் இந்த இருவரும் சம்பந்தப்பட்டுள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
ஏழு மாதங்களுக்கு முன்பு இருவரும் கைது செய்யப்பட்டனர். காரைக்காலில் ஒரு வீட்டில் திருட முயனறபோது பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டனர். பினனர் போலிஸில் ஒப்படைக்கப்பட்டனர்.
தப்பிய இருவரையும் பிடிக்க புதுவை மற்றும் தமிழக போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, March 29, 2000, 5:30 [IST]