For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

மூலிகைப் பெட்ரோல் தயாரிப்பு முறையை ராமர் பிள்ளை தாக்கல் செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:

மூலிகைப் பெட்ரோல் தயாரிப்பு முறையை ராமர் பிள்ளை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த விபரமாவது:

தமிழ்நாட்டில் மூலிகைகளைக் கொண்டு பெட்ரோல் தயாரித்துப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ராமர் பிள்ளை. அவர் தயாரித்தது மூலிகைப் பெட்ரோல் அல்ல. அது வெறும் இராசாயனக் கலவைதான். டொலுவீன், பென்சீன் போன்ற மூலிகைகளைக் கொண்டு அவர் பெட்ரோல் தயாரித்திருக்கிறார் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து சிபிஐ போலீசார் அவரைக் கடந்த 11 ம் தேதி கைது செய்தனர்.

மேலும் சிபிஐ அதிகாரிகள், அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் பல அரசியல் பிரமுகர்களின் முகவரிகளும், திரைப்படப் பிரமுகர்களின் முகவரிகளும் கிடைத்தது. அத்துடன் பெட்ரோல் தயாரிப்பதற்கான ஃபார்முலாக்கள் சிலவற்றையும் போலீசார் ராமர் பிள்ளை வீட்டிலிருந்து கைப்பற்றினர்.

சிறையில் அடைக்கப்பட்ட ராமர்பிள்ளை, தன்னை ஜாமீனில் விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமர் பிள்ளை தயாரித்த பெட்ரோலை விஞ்ஞானிகள் மூலிகைப் பெட்ரோல் என்று ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் அவருக்கு அரசியல் மற்றும் சினிமா பிரமுகர்களின் தொடர்பு இருப்பதால் அவரை வெளியே விட்டால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

மேலும் பெட்ரோல் தயாரிப்பதற்கான ஃபார்முலாக்கள், அவை தயாரிக்கப்பட தேவைப்படும் மூலிகைகள், அவை கிடைக்கும் இடங்கள், அவை ரசாயனப் பொருட்களுடன் கலக்கப்பட வேண்டிய விகிதங்கள், தயாரிக்கத் தேவைப்படும் நேரங்கள், அவற்றை உபயோகிப்பதால் வாகனங்களுக்கு ஏற்படும் நன்மைகள் ஆகியவை குறித்த விவரங்களை ராமர்பிள்ளை அவரது வக்கீல் மூலம் வெள்ளைத் தாளில் எழுதி அவற்றை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி தீர்ப்புக் கூறினார். முன்னதாக இந்த வழக்கு வரும் 6 ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X