வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தமிழக போதைப் பொருள் தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் சமீபத்தில் 1.25 கிலோ ஹெராயின், 13 கிலோ பாப்பி போதைப் பொருள், 250 கிராம் டையாசெபாம் போதை மருந்து ஆகியவற்றை கைப்பற்றினர். இதைக் கடத்திய 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கோயம்புத்தூர், ராமநாதபுரம், சேலம், நாகப்பட்டிணம் ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் இந்த பேதைப்பொருள் பிடிபட்டது. கோயம்புத்தூரில் அப்துல் கரீம் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். அதே போல திருச்செங்கோட்டை சேர்ந்த சுப்பிரமணியும் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரத்தில் நாகேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டு 13 கிலோ பாப்பியும் 500 கிராம் ஹெராயினும் பறிமுதல் செய்யப்பட்டன. சேலத்தில் எததிராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். நாகபட்டிணத்தில் கிளியூர் அருகே மாடசாமி என்பவர் கைது செய்யப்பட்டு 250 கிராம் டையசெபாம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தவிர சென்னையில் சமீபத்தில் 35.1 கிலோ எபிதிரைன் ஹைட்ரோ குளோரைட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், இவர்கள் மும்பையிலிருந்து இந்த ரசாயணத்தை மணிப்பூர் மாநிலத்துக்குக் கடத்தி வந்தனர். இந்த ரசாயணம் அங்கிருந்து மியான்மாவுக்கு (பர்மா) கடத்தப்பட்டு அதைக் கொண்டு போதை மருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது.
யு.என்.ஐ.