வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மரணமடையும்போது அழுக்காவதும் நின்று விடுகிறது.
அழுக்கு வேறு; அழுகுதல் வேறு
மரணத்தில் நிகழ்கிற அழுகல்
அழுக்கை உடல் வெளியே தள்ள இயலாத தள்ளாமையால்தான்.
உலகம் முழுவதுமே துப்புரவுத் தொழிலாளிகளால்தான் இயங்குகிறது.
பூமியை துப்புரவு செய்வது உழவு -
நூலை துப்புரவு செய்வது நெசவு -
மண்ணைத் துப்புரவு செய்வது குயவு -
கடல் துப்புரவாவது மழை -
காற்று துப்புரவாவது தென்றல்
தொடர்ந்த துப்புரவால் சுழற்சி நடக்கிறது.
நீரும் சுத்திகரிக்கிறது -
நெருப்பும் சுத்திகரிக்கிறது -
நீர் சுத்திகரித்து, தான் அழுக்கடைந்து விடுகிறது -
நெருப்பு தன்னைத் தொடர்ந்து சுத்திகரித்து
அழுக்கடைகிறது.
தண்ணீர் மாசுபடுகிறது -
சுவை குன்றுகிறது -
கலக்கிறவற்றால்
சேர்கிறவற்றால்
கூடுகிறவற்றால்
நீர்கூட நீர்த்துப் போகிறது.
தீ அழுக்கடைவதில்லை -
தன்னைத் தொடர்ந்து சுத்தப்படுத்திக் கொண்டு
தூய்மையாயிருக்க
எரியத் தெரியவேண்டும்.
பலர் நினைக்கிறார்கள் -
நெருப்புக்கு எரிக்கத்தான் தெரியுமென்று -
அதுவும் எரிந்து போகிறதென்பது
அவர்களுக்குத் தெரியாமல் போகிறது.
தீ அழிக்கத் தானே செய்யும் -
அது எப்படி சுத்திகரிக்கிறது என்று -
அவர்களுக்குத் தெரியவில்லை
நீரைக் கூட சுத்திகரிக்க நெருப்பு தேவையென்று.
நீரைச் சூடாக்கினால்
தூய நீர் மட்டும் ஆவியாகிக் குளிரும்போதுதான்
தூய்மையான ஞீடிண்ணாடிடூடூஞுஞீ தீச்ணாஞுணூ கிடைக்கிறது.
தூய நீருக்கு
நிறமில்லை
மணமில்லை
சுவையில்லை அதைப் பருகவும் முடிவதில்லை.
கொஞ்சம் தூய்மையற்றுப் போகிறபோதுதான் -
கொஞ்சம் தாதுப் பொருட்கள் கலக்கும்போதுதான் -
நீர் இனிக்கிறது - சுவைக்கிறது.
தூயநீர் வரும்போதும் தாகத்தைத் தணிப்பதில்லை.
நீர் மட்டுமல்ல -
தங்கமும் அப்படித்தான் -
தூய தங்கம் வளைகிறது -
அதை நகையாக மாற்ற கொஞ்சம் அதன் தூய்மை கெடவேண்டும்.
தங்கம் மட்டுமல்ல -
மனிதர்களும்தான் -
முற்றிலும் தூய்மையானவர்கள் மரம்போல் இருப்பார்கள்-
சுவையற்று, உணர்வற்று, மணமற்று, நிறமற்று.
அவர்களுடன் நட்பு கொள்வதும் சிரமம் -.
நட்பு அவர்களைப் பயமுறுத்தும் -
தங்கள் தூய்மை எங்கேனும் அழுக்கடையும் ஆபத்து
நிகழ்ந்து விடுமோ என்று அவர்கள் நடுங்குவார்கள்
நேரடியாக இருக்கும்போது நெருப்பு எரிக்கிறது -
மறைமுகமாக வேறொரு ஊடகத்தின் மூலம் அணுகும்போது
அது சுத்திகரிக்கிறது -
அதுதான் நீரையும் ஆவியாக்கி
மழை பொழியச் செ-
கடலை வடிகட்டும்போதுதான் மேகமாகிறது.
சூரிய நெருப்பின் ஒளியில்தான்
செடி மண்ணிலிருக்கும் சத்தை மணிகளாகப் பிரித்தெடுக்கிறது -
அனைத்துப் படைப்புக்களும், இயக்கமும்
வெவ்வேறு சக்திகள் உற்பத்தி செய்யும்
உஷ்ணத்தின் விளைவாகத்தான்
தனக்குள் ஒரு நெருப்பு கனன்றால்தான்
தன்னைக் கற்பென்றும்,
நேர்மையென்றும்
சுய ஒழுக்கமென்றும் மனிதன் சுத்திகரிக்க முடியும் -
தனக்குள் வைராக்கியம் தீயாகக் கனியும்போதுதான்
உலகத்தின் அசுத்தத்தையெல்லாம் நீக்க
நம் கண்கள் கைகளாக நீளுகின்றன.
துப்புரவுத் தொழிலாளி
சுத்தம் செய்யும்போது
சோறு அவனுக்கு மட்டுமல்ல
அனைவருக்கும் கிடைக்கிறது -
துப்புரவு செய்பவர்கள் இல்லாவிடின்
நம்மைச் சுற்றிய அசுத்தத்திலேயே நாம் அடங்கிப் போவோம் -
அமுங்கிப் போவோம் -
மூச்சுவிட முடியாமல் - பேச்சு வர இயலாமல்.
(சாரல் இன்னும் தெளிக்கும்...)