For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேட்ச் பிக்ஸிங்: தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - கங்குலி

By Staff
Google Oneindia Tamil News

லண்டன்:


மேட்ச் பிக்ஸிங்கில் தவறு செய்ததாக கூறப்படுபவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்தியகிரிக்கெட் அணியின் கேப்டன் செளரவ் கங்குலி கூறியுள்ளார்.

இங்கிலாந்தின் கவுன்டி கிரிக்கெட் அணியான லங்காஷயருக்காக தற்போது விளையாடி வருகிறார் கங்குலி. அங்கு செய்தியாளர்களைச் சந்திப்பதை தவிர்த்து வரும்அவர், மேட்ச் பிக்ஸிங் குறித்து இங்கிலாந்து கேப்டன் ஆதர்டனிடம் சில கருத்துக்களைக் கூறியுள்ளார். இவற்றை ஆதர்டன் பத்திரிகை பேட்டியொன்றில்தெரிவித்துள்ளார்.

ஆதர்டனிடம் கங்குலி கூறியதாவது:

இங்கிலாந்தில் இருப்பதற்காக சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் மேட்ச் பிக்ஸிங் குறித்த சர்ச்சைகள் சூடுபிடித்துள்ளநிலையில் அதிலிருந்து விலகி, கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடிந்துள்ளதால் மகிழ்ச்சியாக உள்ளேன்.

மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக என்னிடம் ஏதாவது சான்று கோரப்படலாம். ஆனால் அதில் நான் எந்த அளவுக்கு உதவ முடியும் என்று தெரியவில்லை.மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது.

இந்திய அணி குறித்தும் உலகம் முழுவதிலும் விமர்ச்சிக்கப்படுகிறது. ஆசிய கிரிக்கெட் வீரர்கள் குறித்தம் சர்ச்சை உள்ளது. இந்த விஷயத்தைப்பொருத்தவரை, தவறு செய்த வீரர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.

கடந்த ஐந்து வருடமாக நான் விளையாடி வருகிறேன். இதுவரை எந்த புக்கியும் என்னை அணுகியதில்லை. பேசியதில்லை என்றார் அவர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X