தமிழகத்தில் இன்று
மூப்பனார் தலைமையில் கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க சுவாமி அழைப்பு
கோவை:
மூப்பனார் தலைமையில் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து தமிழக தேர்தலை சந்திக்க வேண்டும். தி.மு.க.,அ.தி.மு.க.வை புறக்கணிக்க வேண்டும் என கோவையில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி தெரிவித்தார்.
சுப்ரமணிய சாமி கோவையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவிரி நீர், முல்லைப் பெரியார் நீர், கிருஷ்ணா நீர் ஆகியவற்றில் தமிழக அரசு தொடர்ந்து தோல்வியைத் தழுவிவருகிறது. விடுதலைப் புலிகளுக்கு கருணாநிதி முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்,ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கியுள்ளார். தமிழக உரிமைக்கு குரல் கொடுக்காத கருணாநிதி உடனேராஜினாமா செய்ய வேண்டும்.
தமிழகத்தில் அ.தி.மு.க.,தி.மு.க., பா.ஜ.க இல்லாத ஒரு கூட்டணியை உருவாக்க முயற்சித்து வருகிறேன். மூப்பனார்தலைமையில் இந்த கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றார்