தமிழகத்தில் இன்று
திருவண்ணாமலை கோவிலுக்கு டிசம்பருக்குள் கும்பாபிஷேகம்
சென்னை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா டிசம்பருக்குள் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்தமிழ்க்குடிமகன் தெரிவித்தார்.
சட்டசபையில் சனிக்கிழமையன்று நடந்த கேள்வி நேரத்தில் இதுபற்றி திமுக உறுப்பினர் பெ.சு.திருவேங்கடம், த.மா.கா உறுப்பினர் மணிவர்மா ஆகியோர்எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
அமைச்சர் பதில் வருமாறு: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் டிசம்பர் மாதத்திற்குள் நடைபெறும். அதற்காகஇசையமைப்பாளர் இளையராஜா தலைமையில் 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
87 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய நிர்வாக தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குடமுழுக்குப் பணிகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன.
அதேபோல் அங்கு தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 16 கால் கல் மண்டபம் சீரமைக்கும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் கல்மண்டபம் திறக்கப்படும்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது (13.5.96) இக்கோயிலின் ஆண்டு வருமானம் 62 லட்ச ரூபாயாக தான் இருந்தது. இப்போது ஒரு கோடியே 40 லட்சரூபாய் வருமானம் கிடைக்கிறது என்றார்.