குரோனியே மீதான ஊழல் குற்றச்சாட்டு - விசாரிக்கவுள்ள நீதிபதியின் பெயர் அறிவிப்பு
ஜொகான்னஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹான்ஸி குரோனியேலஞ்சம் வாங்கியது தொடர்பான குற்றச்சாட்டை விசாரிக்க நீதிபதி எட்வின் கிங்தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்அமைத்துள்ளது.
இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது கிரிக்கெட்சூதாட்டக்காரர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு தென் ஆப்பிரிக்க அணி தோற்கும்வகையில் விளையாடியதாக குரோனியே மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாககுரோனியேவுக்கும், கிரிக்கெட் சூதாட்டக்காரருக்கும் இடையே நடந்த தொலைபேசிஉரையாடல் டேப் செய்யப்பட்டது. அந்த ஆதாரத்தை வைத்து குரோனியே மீது தில்லிபோலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று முதலில் மறுத்த குரோனியேபின்னர் பணம் பெற்றதை ஒப்புக் கொண்டார். ஆனால், ஆட்டத்தைத் தோற்பதற்காகலஞ்சம் வாங்கவில்லை. ஆட்டத்தின் நிலைமை குறித்து தெரிவிப்பதற்காக லஞ்சம்வாங்கினேன் என்று குரோனியே தெரிவித்தார். இதையடுத்து, அணியிலிருந்துமட்டுமல்ல அணி கேப்டன் பதவியிலிருந்து குரோனியே நீக்கப்பட்டார். அவர் மீதுவிசாரணை நடத்தப்படும் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
அதன் அடிப்படையில் குரோனியே மீது விசாரணை நடத்த ஒரு குழுவை வாரியம்ஏற்படுத்தியுள்ளது. அதன் தலைவராக நீதிபதி எட்வின் கிங் நியமிக்கப்பட்டுள்ளார்.