மேட்ச் பிக்சிங்: "மனோஜ் பிரபாகருக்கு கபில்தேவ் பணம் கொடுத்தார்"
புது தில்லி:
மனோஜ் பிரபாருக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்தது முன்னாள் கேப்டன்கபில்தேவ்தான் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள்தலைவர் ஐ.எஸ். பிந்த்ரா தெரிவித்த குற்றச்சாட்டுக்குக் கருத்து தெரிவிக்க கபில் தேவ்மறுத்துவிட்டார்.
இலங்கையில் நடந்த சிங்கர் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில்,இந்திய அணி தோற்கும் வகையில் விளையாடும்படி மனோஜ் பிரபாகரைக் கபில்தேவ்கேட்டுக் கொண்டதாகவும் அதற்காக அவருக்கு ரூ.25 லட்சம் கொடுக்க முன்வந்ததாகவும் கபில்தேவ் மீது பிந்த்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
இது இந்திய கிரிக்கெட் மட்டுமல்ல உலக கிரிக்கெட் அரங்கில் பெரிய அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. பிந்த்ராவின் குற்றச்சாட்டு குறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்ககபில் மறுத்துவிட்டார்.
பிந்த்ரா மற்றும் பிரபாகர் கூறிய குற்றச்சாட்டுகளுக்குப் பதில் கூறுவது பற்றி சிறிதுகுழப்பநிலையில் உள்ளேன். பிரபாகர் என்ன சொன்னார், எதன் அடிப்படையில்பிந்த்ரா இத்தகைய குற்றச்சாட்டை கூறியிருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லைஎன்றார் அவர்.
பிந்த்ரா கூறிய குற்றச்சாட்டு உண்மை என்று பிரபாகர் ஒப்புக் கொண்டு அடுத்த சிலவிநாடிகளில் நான் எனது அறிக்கையை வெளியிடுவேன். இந்தமாதிரி குற்றச்சாட்டைபிந்த்ராவால் மட்டுமே கூறிமுடியும் என்றபோது நான் என்ன சொல்வது என்றுதெரியவில்லை என்றார் கபில்தேவ்.
என் மீது பிந்த்ரா கூறியுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று மட்டும் இப்போதுகூறமுடியும். எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி சட்டரீதியானஅடுத்தகட்ட நடவடிக்கை பற்றி பின்னர் அறிவிப்பேன் என்றார் கபில்தேவ்.
இதற்கிடையே, கபில்தேவ் மீது ஐ.எஸ். பிந்த்ரா குற்றச்சாட்டு கூறியுள்ளது குறித்துகபில்தேவின் பயிற்சியாளரும், துரோணாச்சாரியா விருது பெற்றவருமான டி.பி.ஆசாத் அதிர்ச்சித் தெரிவித்துள்ளார்.
இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது. இதை என்னால் நம்பமுடியவில்லை. பலஆண்டுகளாக கபில்தேவை எனக்கு நன்றாகத் தெரியும். இது போன்ற காரியத்தைஅவர் ஒருபோதும் செய்யமாட்டார் என்று ஆசாத் கூறியுள்ளார்.
யு.என்.ஐ.