For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேட்ச் பிக்சிங்: "மனோஜ் பிரபாகருக்கு கபில்தேவ் பணம் கொடுத்தார்"

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:


1994ம் ஆண்டு நடந்த இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் சரியாக விளையாட வேண்டாம் என்று கூறி மனோஜ்பிரபாகருக்கு கபில் தேவ் பணம் கொடுத்தார் என புதிய குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் பிந்த்ரா இந்த குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

சரியாக விளையாடாமல் இருப்பதற்காக பிரபாகருக்கு ரூ. 25 லட்சம் கொடுத்த அந்த மனிதர் தான் இப்போது கிரிக்கெட் உலகில்மிகப் பெரிய மனிதர், அவர் இந்தியாவின் மைக்கேல் ஜோர்டனாகக் கருதப்படுகிறார். அவரது பெயர் தான் கபில்தேவ் என்றார்பிந்த்ரா.

கடந்த வாரம் சண்டீகரில் நடந்த சந்திப்பின்போது பிரபாகர் இந்தத் தகவலை தன்னிடம் தெரிவித்தாக பிந்த்ரா கூறினார். இதனைசிபிஐயிடமும் கூறப்போவதாக பிரபாகர் கூறியதாக பிந்த்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து கபில்தேவிடம் கேட்டீர்களா என நிருபர்கள் கேட்டபோது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவசரமாக லண்டன் செல்ல வேண்டியுள்ளது. எனவே, இது குறித்து அவரிடம் உடனடியாக பேச முடியவில்லைஎன்றார்.

பின்னர் லண்டனில் அவர் பேசுகையில், ஐ.சி.சி. கூட்டத்தில் என்னிடம் ஏதும் கேட்கவேயில்லை. என்னிடம் கூட்டத்தில்விசாரணை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், பல உண்மைகளைச் சொல்லி அவர்களுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தி விடுவேன்என்ற பயத்தால் என்னிடம் ஏதும் கேட்கவில்லை.

வெறும் கிரிக்கெட் வீரர்கள் மட்டும் இந்த மோசடியில் ஈடுபட்டுவிட முடியாது. அதிகாரிகளும் உடந்தையாக இருந்திருக்கவேண்டும். அல்லது தெரிந்திருந்தும் கண்டு கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும். நான் பி.சி.சி.ஐ. தலைவராக இருந்தபோதுபார்புடோசில் நடந்த போட்டியில் சில இந்திய வீரர்கள் வேண்டுமென்றே நன்றாக விளையாடவில்லை. இதற்கு மேட்ச்-பிக்சிங்தான் காரணம் என சந்தேகிக்கப்பட்டது. அப்போது டெண்டுல்கர் தான் கேப்டன். ஆனால், அது குறித்து குற்றம் சாட்டப்பட்டும்விசாரணையே நடக்கவில்லை என்றார் பிந்த்ரா.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X