For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முகத்தில் தெளித்த சாரல்...

By Staff
Google Oneindia Tamil News

3-வது அணி அமைக்க டின்னர் பார்ட்டி வைப்பேன்: சுப்பிரமணிய சுவாமி

ஊட்டி:

தமிழகத்தில் மூன்றாவது அணியை உருவாக்க டின்னர் பார்ட்டி ஏற்பாடு செய்வேன் என ஊட்டியில் ஜனதா கட்சிதலைவர் சுப்ரமணியம் சுவாமி பேட்டியளித்தார்.

அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கையில் தமிழ் மக்களுக்கு தனி மாநிலம் வழங்கினால் பிரச்சனை தீரும்.தமிழகத்தில் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. நீலகிரியில் கூட விடுதலைப்புலிகள்உள்ளனர்.

ராஜீவ்கொலை வழக்கில் தூக்குத்தண்டனை பெற்ற நளினிக்கு தமிழக அரசு கருணை காட்டியிருப்பதைஏற்றுக்கொள்ள முடியாது.

கடந்த ஆண்டு மத்தியில் ஆட்சியைக் கவிழ்க்க டீ பார்ட்டி நடத்தினேன். அதேபோல் தமிழகத்தில் தமாகா-காங்கிரஸ் தலைமையில் மூன்றாவதுஅணி அமைக்க டின்னர் பார்ட்டி நடத்துவேன். இந்த அணியில் வாழப்பாடிராமமூர்த்தியையும் சேர்க்க முயற்சி செய்வேன்.

நீலகிரியில் தேயிலை விலை வீழ்ச்சி பிரச்சனையைத் தீர்க்க எம்.பி. மாஸ்டர் மாதன் தவறிவிட்டார்.இப்பிரச்சனையால் மலர்க்கண்காட்சியை ரத்து செய்ய மக்கள் கூறினால் அதனை செயல்படுத்த அரசுமுன்வரவேண்டும் என்று சுப்ரமணியம் சுவாமி கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X