For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
இந்திய பொருளாதார நிபுணருக்கு பிரேஸில் நாட்டின் உயர்விருது
புது தில்லி:
பிரேஸில் நாட்டின் பொருளாதாரச் சீர்திருத்தத்துக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டிஇந்தியாவின் பொருளாதார நிபுணர் பார்த்தசாரதி ஷோமுக்கு அந் நாட்டின் உயரியவிருது வழங்கப்பட உள்ளது.
1990-ம் ஆண்டுகளில் சர்வதேச நிதியத்தின் முதுநிலை பொருளாதார நிபுணராகபிரேஸில் நாட்டில் பார்த்தசாரதி ஷோம் பணியாற்றினார். அப்போது, அந் நாட்டின்பொருளாதாரத்தை மேம்படுத்த பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். இதனால்,பிரேஸிலின் பொருளாதார நிலை உயர்ந்தது.
பார்த்தசாரதி ஷோமின் இச் சேவையைப் பாராட்டி, பிரேஸின் வெளிநாட்டினருக்கானஉயரிய விருது வழங்கப்படவுள்ளது. பார்த்தசாரதி ஷோம் தற்போது இந்திய ஆராய்ச்சிமற்றும் சர்வதேச பொருளாதார உறவு கவுன்சிலில் ரிசர்வ் வங்கியின் தலைவராகப்பணியாற்றி வருகிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.
Story first published: Saturday, May 6, 2000, 5:30 [IST]