தமிழகத்தில் இன்று
திருவனந்தபுரம்:
கடந்த பல ஆண்டுகளில் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி ரூ. 50 பில்லியன் அளவைத் தாண்டியுள்ளது. நாட்டின் அந்நியச் செலாவணியில் இது 50சதவீதமாகும்.
கடல் உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தின் அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கடல் உணவு ஏற்றுமதி ரூ. 50.96 பில்லியனாகஇருந்தது. 1998-99ல் இது 46.27 பில்லியன் என்ற அளவில் இருந்தது.
அளவைப் பொருத்தவரை, 3,02,934 டன் என்ற அளவிலிருந்து 3.40,000 டன் அளவுக்கு ஏற்றுமதி நடந்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கான ஏற்றுமதி வர்த்தகம 32 சதவீதம் அதிகரித்ததே ஏற்றுமதி அளவு அதிகரித்துள்ளதற்கு முக்கியக் காரணம்.இதேபோல, அமெரிக்காவுக்கான ஏற்றுமதியும் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது.
இந்திய கடல் உணவை வாங்குவோரில் முதலிடத்தில் ஜப்பானியர்கள் உள்ளனர். 45 சதவீத அளவுக்கு இது உள்ளது. இருப்பினும் 1998-99ல்ஜப்பானுக்கான ஏற்றுமதி அளவு ரூ. 22.95 மில்லியனாக இருந்தது. இது 99-00ல் ரூ. 22.64 பில்லியனாக குறைந்து விட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.