தமிழகத்தில் இன்று
சென்னை:
இலங்கைக்கு எந்த நாடும் ராணுவ உதவி செய்யக் கூடாது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
கடந்த சில நாட்களாக இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் தங்கள் சுய உரிமை போராட்டத்தில் ஒரு கட்டத்தைஎட்டி வெற்றி பெறும் நிலையில் உள்ளனர். இந்நிலையில் தமிழர்களை ஒடுக்க இலங்கை அரசு இந்திய ராணுவ உதவியையும்,ஆயுதங்களையும் அனுப்பக் கோரிக்கை விட்டுள்ளது.ட
இந்த இரு கோரிக்கைகளையும் நிராகரிக்க வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எதிராக இந்திய ராணுவம் ஆயுதம்மட்டுமின்றி உலகின் எந்த நாட்டு ராணுவம் ஆயுதம் வழங்கக் கூடாது.
இலங்கை தமிழ் மக்கள் தங்கள் சுய பாதுகாப்புக்கு எப்படிப்பட்ட அரசு அமைய வேண்டும் என்பதை அவர்களிடமே விட்டுவிடவேண்டும். இதில் எந்த நாடும் தலையிடக் கூடாது என்பதே புதிய தமிழகத்தின் விருப்பம் என்றார்.