For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
இந்திய பள்ளிகளில் மாணவிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

டெல்லி:

இந்தியாவில் ஆரம்பப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒவ்வொரு வருடமும்பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

மனிதவள மேம்பாட்டுத்துறையின் ஆண்டறிக்கைப்படி மொத்தத்தில் 70 சதவீத குழந்தைகள் ஆரம்பப் பள்ளிகளில் படிக்க வருகிறார்கள். 1950-51 ம்ஆண்டுகளில் 5.4 மில்லியனாக இருந்த நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை 40 வருடங்களுக்குப் பின அதாவது 1998-99 ம் ஆண்டில் 48.2மில்லியனாக உயர்ந்துள்ளன.

2000 மாவது ஆண்டிலும் மாணவிகளின் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்படி அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. அதனால் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின்எண்ணிக்கையில் கணிசமான அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிராமங்களிலிருந்தும் பள்ளிக்கு வரும் மாணவிகளின்எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கிராமங்களில் வசிக்கும் 94 சதவீத மக்களில் 14 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியருக்கு 1கிலோ மீட்டர் தொலைவிலும் 84 சதவீத கிராமங்களில்வசிக்கும் மக்களில் மாணவியர்கள் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் சென்று படிக்கும் அளவுக்கு பல பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பிகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, மேகாலயா மாநிலங்களில் படிக்கும் கல்வியறிவுபெற்றோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவேஉள்ளன.

ஆந்திரப் பிரதேசம், ஒரிசா, சிக்கிம் மாவட்டங்களில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையும் சராசரி அளவே உள்ளது. பள்ளியில் தாழ்த்தப்பட்டமற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவ மாணவியரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X