ஆசியக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி பயிற்சியாளராக கபில் தேவ் தொடருவார்- லேலே
துபாய்:
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் இம் மாதம் இறுதியில் துவங்க உள்ள ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின்பயிற்சியாளராக கபில்தேவ் தொடருவார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியச் செயலர் ஜெ.ஒய். லேலே தெரிவித்தார்.
இது தொடர்பாக கப்ஃப் நியூஸுக்கு அவர் அளித்த பேட்டி:
இந்திய கிரிக்கெட் அணிக்குப் புதிய பயிற்சியாளரை நியமிக்க இந்திய கிரிக்கெட்கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாக வெளியாகும் செய்திகள் தவறு.வாரியத்தைப் பொறுத்தவரை, இந்திய அணியின் பயிற்சியாளர் கபில் தேவ்தான். மே15-ம் தேதி புனேயில் துவங்கும் பயிற்சி முகாமில் அவர் கலந்து கொள்வார்.
சமீபத்தில் கிரிக்கெட் வீரர்கள் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படுவதால்,இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஏதாவது பிரச்சினை, நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாஎன்பது எனக்குத் தெரியாது. புனேயில் நடைபெற உள்ள 10 நாள் பயிற்சி முகாமில்வீரர்கள் அனைவரையும் நான் சந்தித்துப் பேசுவேன். அவர்களுடன் லஞ்ச ஊழல்குற்றச்சாட்டுகள் குறித்து ஆலோசிப்பேன்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அடுத்த கூட்டம் மே 19-ம் தேதி புதுதில்லியில் நடைபெற உள்ளது என்றார் லேலே.
யு.என்.ஐ.