தமிழகத்தில் இன்று
டெல்லி:
தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் 70,000 இலங்கைத் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் வித்யாசாகர் ராவ்லோக்சபாவில் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை லோக் சபாவில் எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் கூறியதாவது:
மார்ச் 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில், 70,000 இலங்கை அகதிகள் தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். தமிழகம் முழுவதிலும் உள்ள 129முகாம்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஒரிசாவிலுள்ள ஒரு முகாமிலும் இலங்கை அகதிகள் வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திற்கு வெளியே உள்ள முகாம்களில் 30,000 இலங்கை அகதிகள்தங்கியுள்ளனர்.
காஷ்மீரிலிருந்து 53,538 குடும்பத்தினர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்ககும் அகதிகளாக வெளியேறிக் குடியேறியுள்ளனர். வெளியேறிவர்களுள்இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் மற்றும் பிற மதத்தவரும் அடங்குவர்.
ஜம்முவில் மட்டும் 31,940 குடும்பங்கள் வசிக்கின்றன. டெல்லியில் 19,338 குடும்பத்தினர் குடியேறியுள்ளனர். இந்தியாவின் பிற மாநிலங்களில் 2710குடும்பத்தினர் இடம் பெயர்ந்துள்ளனர். வெளியேறிய குடும்பங்களில் 27,282 பேர் இந்துக்கள், 2303 பேர் முஸ்லீம்கள் மற்றும் 1830 பேர்சீக்கியர்கள். 75 பேர் பிற மதத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தங்கியுள்ள திபெத்திய அகதிகளின் எண்ணிக்கை 1,08,414 பேர் ஆகும். 1959-ம் ஆண்டு மார்ச் மாதம் திபெத்தைசீனா ஆக்கிரமித்தது. இதையடுத்து அங்கிருந்து திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா வெளியேறினார். அதன் பிறகு திபெத்திலிருந்து வெளியேறிஇந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்கள் மட்டுமே இங்கு தங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வெளி நாட்டவராகவே கருதப்பட்டுவருகின்றனர்.
1998-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரையிலான கணக்குப்படி இந்தியாவில் 12,255 ஆப்கானியர்கள் அகதிகளாக தங்கியுள்ளனர்.
இலங்கை மற்றும் திபெத்திய அகதிகள் மட்டும் அரசின் செலவில் தங்கியுள்ளனர். பிற அகதிகள் முறையான பாஸ்போர்ட் மூலம் இந்தியாவில்தங்கியுள்ளனர். இவர்களது விசாக்காலம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர்.
யு.என்.ஐ.