For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
சியரா லியோனுக்கு மேலும் 160 இந்திய வீரர்கள் சென்றனர்
டெல்லி:
மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட 160 இந்திய வீரர்கள் திங்கள்கிழமை இரவு சிறப்பு ஐக்கிய நாடுகள்சபை விமானத்தில் சென்றனர் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் லோக் சபாவில் தெரிவித்தார்.
மீதமுள்ள வீரர்களும் இந்த மாதம் 25-ம் தேதிக்குள் சியரா லியோனுக்கு அனுப்பப்படுவார்கள் என்றார் ஜஸ்வந்த் சிங்.
காங்கிரஸ் உறுப்பினர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி எழுப்பிய கேள்விக்கு ஜஸ்வந்த் சிங் பதிலளிக்கையில், சியரா லியோனில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளஐக்கிய நாடுகள் சபையின் படைகளில் இரண்டாவது பெரிய குழு இந்தியப் படைதான்.
இந்தியப் படையின் எண்ணிக்கை தற்போது 1660 ஆக உள்ளது. நைஜீரியா 3200 வீரர்களுடன் முதலிடத்தில் உள்ளது என்றார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, May 17, 2000, 5:30 [IST]