இலங்கை அணியில் மீண்டும் அரவிந்த டிசில்வா
கொழும்பு:
இலங்கை கிரிக்கெட் அணியில் அரவிந்த டிசில்வா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். டாக்காவில் இம் மாதம் துவங்கஉள்ள ஆசியக் கோப்பைக்காக புதன்கிழமை அறிவிக்கப்பட்ட இலங்கை அணியில் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்கு கொள்ளும் ஆசியக் கோப்பை ஒருநாள்கிரிக்கெட் போட்டித் தொடர் இம் மாதம் 28-ம் தேதி துவங்குகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் சென்ற இலங்கை அணியில் அரவிந்த டிசில்வாஇடம் பெறவில்லை. ஆனால், ஷார்ஜா போட்டிக்கான அணியில் இடம்பெற்றார். ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்தில்கலந்து கொள்வதாக டிசில்வா கூறியதை அடுத்து ஷார்ஜா போட்டிக்கான அணியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
கடைசியாக நடந்த ஆசியக் கோப்பைப் போட்டியில் இலங்கை வெற்றி பெற்று கோப்பையை வென்றதுகுறிப்பிடத்தக்கது.
ஆசியக் கோப்பைக்கான 14 பேர் கொண்ட இலங்கை அணி விவரம்:
ஜெயசூர்ய (கேப்டன்), ஜெயவர்த்தன (துணை கேப்டன்), கலுவிதரன (விக்கெட் கீப்பர்), அரவிந்த டிசில்வா,அட்டபட்டு, ஆர்னால்டு, தில்ஷன், இந்டிகா டி சேரம், வாஸ், டிசில்வா, வீரரத்னே, முரளிதரன், சந்தனா.