For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
மட்டக்களப்பு குண்டுவெடிப்பு: பலி 23 ஆக உயர்வு

கொழும்பு:

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு நகரில் புதன்கிழமை நடந்தபுத்த பூர்ணிமா விழாவில் குண்டுவெடித்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகஉயர்ந்தது.

புத்தர் பிறந்தநாள் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் புதன்கிழமைகொண்டாடப்பட்டது. மட்டக்களப்பு நகரிலும் இதுபோன்ற விழா ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. அங்குள்ள புத்தர் கோவிலில் விழா நடந்து கொண்டிருந்தபோது,திடீரென சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.

இதில் மூன்று போலீஸ் அதிகாரிகள் உள்பட 23 பேர் இறந்தனர். இறந்தவர்களில் 6குழந்தைகளும் அடங்குவர். 70-க்கும் மேற்பட்டவர்கள் இதில் காயமடைந்தனர்.அப்பகுதி முழுவதும் ரத்தக் களரியாக இருந்தது. இறந்த உடல்கள் சிதறிக் கிடந்தன.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் நகரைக் கைப்பற்ற இலங்கை ராணுவத்துடன்விடுதலைப் புலிகள் கடுமையாக சண்டையிட்டு வரும் நேரத்தில் மட்டக்களப்பு நகரில்குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவத்திற்கு விடுதலைப் புலிகளே காரணம் என்று போலீஸ் தரப்பில்தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, அமைதி கோரி வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இலங்கையின்பல்வேறு பகுதிகளில் அமைதிக் கூட்டம் நடத்த இலங்கை ரோமன் கத்தோலிக்க சர்ச்முடிவு செய்துள்ளது. அப்போது பிரார்த்தனையும் நடத்தப்படும் என்று சர்ச் சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X