தமிழகத்தில் இன்று
டெல்லி:
சிறுபான்மை வகுப்பினர் மீது தொடர்ந்து நடந்து வரும் தாக்குதல்கள், ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவாத சக்திகளுக்கு பாரதீய ஜனதாக் கூட்டணி அரசுஅளித்து வரும் மறைமுகஆதரவையே காட்டுகிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், அரசின் போக்கு குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் எப்போதும்உஷாராக இருக்க வேண்டும். ராஷ்ட்ரிய சுயம் சேவா அமைப்பின் ஆயுள்கால உறுப்பினர்களின் வழிகாட்டுதலின்படி இந்த அரசு நடந்து வருகிறது.இவர்களில் பலர் அரசிலும் இடம் பெற்றுள்ளனர். ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்து கொண்டே ஆட்சியிலும் இவர்கள் இருந்து வருகிறார்கள்.
மதச்சார்பின்மை குறித்து பா.ஜ.க. கூட்டணி அரசின் கருத்து தெளிவாக இல்லை. பா.ஜ.க. அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் அவர்களது மறைமுகக்கொள்கையையே பிரதிபலிக்கின்றன.
உர விலையைக் குறைக்க அரசு மறுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். நாட்டின் பல பகுதிகளில்வறட்சி காரணமாக விவசாயிகள் கடும் பாதிப்பில் உள்ளனர்.
கடந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. எதிர்பார்த்த உற்பத்தி இல்லை. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்திக்கநேர்ந்தது. மேலும் வெளிநாடுகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியும், இந்திய விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இவர்களில்கரும்பு மற்றும் பருத்தி விவசாயிகளே அதிகம் பாதிக்கப்பட்டனர்.
கேரளம் உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதிலும் தேங்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
யு.என்.ஐ.