தமிழகத்தில் இன்று
சென்னை:
சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும்,வியாபாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து 30 வியாபாரிகள்கைது செய்யப்பட்டனர்.
சென்னை நகரில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று சென்னைஉயர்நீதி மன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்பு அகற்றும்பணி தீவிரமடைந்துள்ளது.
போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட குழுவினர் நகரில் தி.நகர்,ராயப்பேட்டை, லஸ், மயிலாப்பூர் உட்பட 10 இடங்களில் ஆக்கிரமிப்புகளைஅகற்றினர். ராயப்பேட்டை ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்புதெரிவித்தனர்.
இதனால் அப் பகுதியில் திடீர் பதட்டம் ஏற்பட்டது. போலீசாருடன் வியாபாரிகளும்மோதத்துவங்கினர். இதையடுத்து பணி செய்யவிடாமல் தடுத்த குற்றத்திற்காக 30வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிதொடர்ந்தது.