For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
இந்தியாவில் ரூ.21.5 கோடி முதலீடு செய்கிறது இ.ஏ.எஸ்.ஐ. டெக்னாலஜீஸ் நிறுவனம்

பெங்களூர்:

பெங்களூரில் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனமான இ.ஏ.எஸ்.ஐ.டெக்னாலஜீஸ், அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.21.5 கோடி முதலீடு செய்ய திட்-ட-மிட்-டுள்-ள-து.

இத் தகவலை, இந் நிறுவனத்தின் தலைவர் பிரகாஷ் கிருஷ்ணசாமி தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும்கூறியதாவது:

இ.ஏ.எஸ்.ஐ. டெக்னாலஜீஸ் நிறுவனம் கம்ப்யூட்டர் மென்பொருள் (சாப்ட்வேர்) தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுவருகிறது. இந் நிறுவனத்துக்கு பெங்களூரில் மட்டுமல்லாமல் மிச்சிகன், மியூனிச், பிராங்க்பர்ட் ஆகிய நகரங்களில்கிளைகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 85 பேர் பணியாற்றுகின்றனர்.

கம்ப்யூட்டர் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கேற்ப போட்டிகளைச் சமாளிக்கும் வகையில் தனதுதொழில் திறனை அதிகரிக்க இ.ஏ.எஸ்.ஐ. டெக்னாலஜீஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும், அடுத்த 3ஆண்டுகளில் தனது வருவாயை ரூ.215 கோடியாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

அத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.21.5 கோடி முதலீடு செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த முதலீட்டின் கீழ் மைசூர் மற்றும் புனேயில் புதிய கிளைகள் திறக்கப்படும். அதன் மூலம்நிறுவனத்தின் செயல்திறன் அதிகரிக்கப்படும்.

மேலும், நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கையை 700 ஆக அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதுஎன்றார் கிருஷ்ணசாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X