தமிழகத்தில் இன்று
அகர்தலா:
திரிபுராவில் என்எல்எஃப்டி தீவிரவாதிகள் பொதுமக்கள் 7 பேரைச் சுட்டுக்கொன்றார்கள். அவர்களில் 4 பேர் பெண்கள். இச்சம்பவத்தில் மேலும்5 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து திரிபுரா மாநில டிஜிபி கே.டி.டி.சிங் நிருபர்களிடம் கூறியதாவது:
திரிபுராவில் வியாழக்கிழமை இரவு என்எல்எஃப்டி தீவிரவாதிகள் சந்தரமோகன் பாரா என்பவரது வீட்டிற்குள் வலுக்கட்டாயமாய்ச்சென்றார்கள். அப்போது அவர்கள் வீட்டில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே நுழைந்த அக்கும்பல் வீட்டிலுள்ளவர்களைநோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாய் சுட்டனர்.
இச்சம்பவத்தில் வீட்டிலிருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அங்கிருந்து திரும்பும்போது சில வீடுகளையும் அத்தீவிரவாதிகள் எரித்தார்கள்.
இதேபோல் தீவிரவாதிகள் திரிபுராவில் கமலாநகர் பகுதியில் பெண் ஒருவரைச் சுட்டுக் கொன்றார்கள். இதையடுத்து போலீசார் அப்பகுதிக்கு விரைந்துசென்று தீவிரவாதிகளைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
யு.என்.ஐ.