For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
குற்றங்களைத் தடுக்க ரயில் நிலையங்களில் நாய்ப் படை: ஐ.ஜி. திலகவதி

சென்னை:

ரயில்வே நிலையங்களில் நடக்கும் குற்றங்களைத் தடுக்கவும், கடத்தல், வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கவும் நாய்ப் படைகளைப் பயன்படுத்தத்திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே ஐ.ஜி. திலகவதி கூறியுள்ளார்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் 32 ரயில்வே நிலையங்களில் இந்த நாய்ப் படை அமைக்கப்பட வேண்டும்என்று மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

12 குழுக்களாக அதிகாரிகள் இதில் செயல்படுவார்கள். முதலில் முக்கியமான நகரங்களில் உள்ள ரயில்வே நிலையங்களில் இது அமைக்கப்படும்.இதற்காக நாய்களுக்கு ஸ்பெஷல் பயிற்சியும் வழங்கப்படும்.

விரைவில் தமிழ்நாடு ரயில்வே போலீஸ் தரப்பில் வெப் தளம் ஒன்று அமைக்கப்பட இருக்கிறோம். மேலும், தமிழகத்தில் உள்ள ரயில்வே காவல்நிலையங்களை கம்ப்யூட்டர்மயமாக்கவும் பணிகள் நடந்து வருகிறது.

ரயிலில் அரிசி கடத்தலில் இதுவரை 15,094 கிலோ பறிமுதல் செய்துள்ளோம். இதில் 10,929 கிலோ அரிசி ரேசன் அரிசி என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X