தமிழகத்தில் இன்று
புதுவை:
புதுவை மில்லேனியம் கால்பந்துப் போட்டியில் நாடு முழுவதும் இருந்து சுமார் 20 அணிகள் பங்கு கொள்கின்றன.
இது குறித்து புதுவை கால்பந்துச் சங்கத் தலைவர் செல்வகாந்தி கூறியதாவது:
புதுவை மில்லேனியம் கால்பந்துப் போட்டி புதுவையில் ஜூன் 4-ம் தேதி துவங்குகிறது. நாடு முழுவதும் இருந்துசுமார் 20 அணிகள் இதில் பங்கு கொள்கின்றன. ஜூன் 18- தேதி வரை போட்டிகள் நடைபெறும்.
இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் மின்னொளியில் நடைபெறும் இப் போட்டிகளை புதுவை துணைநிலைஆளுநர் ரஜனி ராய் துவக்கி வைக்கிறார்.
கால் இறுதிப் போட்டி வரை நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்படும். அதன் பிறகு லீக் முறையில்போட்டிகள் நடைபெறும்.
நாட்டின் பெரிய அணிகளான மோகன் பகான், டோலிகன்ஞ் அக்ரகாமி, சர்ச்சில் பிரதர்ஸ், சால்கோகர், ஏர்இந்தியா, மகேந்திரா அண்ட் மகேந்திரா, எஸ்பிடி-திருவனந்தபுரம் உள்ளிட்ட அணிகள் இப் போட்டியில் பங்குகொள்கின்றன.
வெற்றி பெறும் அணிக்கு ரூ.11 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும். முதல் போட்டியில் சென்ட்ரல் எக்ஸைஸ்அணியும் ஏ-லெவன் அணியும் மோதுகின்றன என்றார் செல்வகாந்தி.
யு.என்.ஐ.