For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
போலீஸ் ஐ.ஜி. வீட்டில் சைக்கிள் திருட்டு

சென்னை:

போலீஸ் ஐஜி வீட்டில் சைக்கிள் திருட்டுப் போனதால் சென்னை போலீசார் திடீர்பரபரப்புடன் திருடனை தேடினர்.

மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சைக்கிள் திருடன் தேடும் பணியில்துப்பறியப்பட்டது. தமிழக பு-ல-னாய்-வுப் பிரி-வு போ-லீஸ் ஐ.ஜி.யாக இருப்பவர் ஆர்.வி.கோபாலன்.

இவரது வீடு கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் சாலையில் உள்ளது.. இவரது வீட்டுவேலைக்காரரின் சைக்கிள் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தது. அந்த சைக்கிள்திருட்டுப் போனது.

இதையடுத்து ஐ.ஜி. வீட்டு சைக்கிள் திருட்டு பற்றி சென்னை போலீசாருக்கு தகவல்தரப்பட்டது. போலீசார் மோப்ப நாயுடன் சென்று, திருடனை தேடும் பணியில்ஈடுபட்டனர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

எப்படியும் திருடனை கண்டுபிடித்துவிட வேண்டும் என்று போலீசாருக்கு ஐ.ஜி.உத்தரவிட்டிருப்பதுதான் இதற்கு காரணம் என்றனர் போலீசார்.

இதேபோல் சென்னையில் சப்இன்ஸபெக்டர் ஒருவர் வீட்டில் பூட்டை

உடைத்து 13 சவரன் நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவைகொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தண்டையார்பேட்டை போலீஸ் குடியிருப்பில் நடந்துள்ளது. முத்தியால்பேட்டை போலீஸ் சப்இன்ஸ்பெக்டராக இருந்தவர் அனந்தநாராயணன். இவரது வீடுஇக் குடியிருப்பில் உள்ளது. அவர் பணிக்கு சென்று விட்டார். அவரது குடும்பத்தினர்கடற்கரைக்கு சென்று விட்டனர்.

இந்த நேரத்தை பயன்படுத்தி கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளேபுகுந்துள்ளனர். வீட்டில் இருந்த 13.5 சவரன் நகை. 5 ஆயிரம் பணம் ஆகியவற்றைசுருட்டிக் கொண்டு தப்பி விட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X