இந்-தி-ய கோ-கோ விளையாட்டுப் பயிற்சியாளர் காலமானார்
டெல்லி:
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் நடைபெற உள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 14 பேர் கொண்டஇந்திய அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
புனேயில் திங்கள்கிழமை கூடிய சந்து போர்டே தலைமையிலான இந்திய அணி தேர்வாளர்கள் குழு 14 பேர்கொண்ட அணியை அறிவித்தது.
அணியின் கேப்டனாக சவுரவ் கங்குலியும், துணை கேப்டனாக ராகுல் திராவிடும் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தின் ஹேமங் பதானி, டெல்லி பந்து வீச்சாளர் அமித் பண்டாரி இருவரும் இந்திய அணியில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
அணி விவரம்:
சவுரவ் கங்குலி (கேப்டன்), ராகுல் திராவிட் (துணை கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், முகம்மது அசாருதீன், அஜய்ஜடேஜா, ராபின் சிங், ஹேமங் பதானி, அனில் கும்ளே, அஜித் அகார்கர், சபா கரீம் (விக்கெட் கீப்பர்), சுனில்ஜோஷி, நிகில் சோப்ரா, டி. குமரன், அமித் பண்டாரி.
மே 28-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை டாக்காவில் நடைபெறும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் பங்கு கொள்கின்றன.
சந்து போர்டே, கேப்டன் கங்குலி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச் செயலர் ஜெயந்த் லேலே, அணிபயிற்சியாளர் கபில் தேவ் ஆகியோர் கூடி ஆலோசனை நடத்தி இந்திய அணிக்கான 14 பேரைத் தேர்வு செய்தனர்.
யு.என்.ஐ.