For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து

By Staff
Google Oneindia Tamil News
நகர் வலம் சென்ற பிஜி புரட்சிக்காரர்களின் தலைவர்

சுவா:

ஆயுதப் புரட்சியையடுத்து தலைநகர் சுவாவில் ஏற்பட்ட வன்முறை மற்றும் சூறையாடல்களால் ஏற்பட்ட பாதிப்பை புரட்சிக்காரர்களின் தலைவரும்,தன்னைத் தானே பிரதரமாக அறிவித்துக் கொண்டுள்ளவருமான ஜார்ஜ் ஸ்பீட் திங்கள்கிழமை நேரடியாகப் பார்த்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஆயுதம் தாங்கிய நபர்களுடன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகுந்த ஸ்பீட், பிரதமர் மகேந்திர பால் செளத்ரி உள்பட பலஎம்.பிக்களை சிறை வைத்தார். ஆட்சியையும் பிடித்து விட்டதாக அறிவித்தார். அதன் பிறகு அவர் வெளியே வரவில்லை.

புரட்சியையடுத்து தலைநகர் சுவாவில் வன்முறை மூண்டது. பல இடங்களில் கலகக்காரர்கள் சூறையாடலில் இறங்கினர்.

நாடாளுமன்றத்திற்கு வெளியே வந்த ஸ்பீட், அங்கு குழுமியிருந்த 30 பேர் கொண்ட பிஜி தேசியவாதக் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பேசினார். பிஜிஇனத்தவர்களிடம் ஆட்சியை ஒப்படைப்பதற்காகவே ஆட்சியைப் பிடித்ததாக அவர் அப்போது தெரிவித்தார்.

அதன் பின்னர் போலீஸ் கார் ஒன்றில் அவர் கிளம்பினார். காரில் அவரது புரட்சிப் படையைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய நபரும், ஒரு போலீஸ் அதிகாரியும்மட்டுமே இருந்தனர். 45 நிமிடங்களுக்கு தலைநகர் சுவாவை அவர் சுற்றிப் பார்த்தார் என்று பிஜி ரேடியா தெரிவித்தது.

நாடாளுமன்றத்திற்கு வெளியே வந்த ஸ்பீட்டைக் கைது செய்ய போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பிஜி ரேடியோ தெரிவித்தது.

புரட்சிக்காரர்களின் பிடியில் இன்னும் 15 பேர் உள்ளனர். இதுவரை 30 பேரை அவர் விடுவித்துள்ளார். பிரதமர், அதிபரின் மகள் ஆகியோர் பிடியில்உள்ளவர்களில் முக்கியமானவர்கள்.

போலீஸும், ராணுவமும் அதிபருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X