தமிழகத்தில் இன்று
ப்ரீடவுன்:
சியோரா லியோனில் அமைதிப் பாதுகாப்புப் பணிக்குச் சென்றிருந்த ஐநா பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மேலும் 29 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தீவி-ர-வா-தி-க-ளின் தலை-வர் ஃபோடே சங்கோ விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சியோரா லியோனில் புரட்சிகரஐக்கிய முன்னணி தீவி-ர-வா-திகள் 250 க்கும் மேற்பட்ட ஐநா பாதுகாப்பு படையினரைப் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தனர். அவர்களிடமிருந்தஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்தவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்கள் தலைவர் ஃபோடே சங்கோ இன்னும் 13 நாட்களில் விடுதலை செய்யப்படுவார் என்றும் ஐக்கிய முன்னணிப் பேராளிகள் தெரிவித்துள்ளனர்.
விடுவிக்கப்பட்ட ஐநா பாதுகாப்புப் படையினர் 19 பேரும் விரைவில் ஃப்ரீடவுனை வந்தடைவார்கள் என்று ஐநா செய்தித் தொடர்பாளர் விம்ஹர்ஸ்ட் தெரிவித்தார்.