தமிழகத்தில் இன்று
மதுரை:
எம்.ஜி.ஆரை. புரட்சி நடிகராகவும், புரட்சித் தலைவராகவும் மாற்றியவர் கருணாநிதி என்று எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் கூறியுள்ளார்.
மதுரை அருகே, கோவில்பட்டி என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆர்.எம்.வீரப்பன் பேசியதாவது:
எம்.ஜி.ஆர்.மதித்த தலைவர் கருணாநிதி. தமிழ்நாட்டில் கருணாநிதி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். எம்.ஜி.ஆரை புரட்சி நடிகராகவும், புரட்சித்தலைவராகவும் ஆக்கியவர் கருணாநிதிதான்.
60 ஆண்டு பொது வாழ்விற்கு சொந்தக்காரரான கருணாநிதியை ஒழிக்காமல் விட மாட்டேன் என்று எங்கிருந்தோ அரசியலுக்கு வந்த ஜெயலலிதாகூறுகிறார். ஆனால், 1985-ல் எம்.ஜி.ஆர். உடல் நலம் குன்றியிருந்தபோது, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்து தமிழ்நாட்டில் ஆளும்தகுதியை எம்.ஜி.ஆர். இழந்து விட்டார். அதனால் முதல் அமைச்சர் பதவியிலிருந்து அவரை நீக்க வேண்டும் என்று கூறியவர் இதே ஜெயலலிதாதான்.
1996-ல் எம்.ஜி.ஆர். கழகம் உருவாக்கப்பட்டபோது, ஜெயலலிதாவை ஆட்சியில் அமர விட மாட்டோம் என்று அறிவித்தோம். அதைசெயல்படுத்தி விட்டோம். அதே போல, 2001-ல் நடக்கும் தேர்தலிலும் ஜெயலலிதாவை தோற்கடிப்போம் என்றார் ஆர்.எம்.வீரப்பன்.