ஆசியக் கோப்பையை வெல்வோம் - கங்குலி
பழங்களிருக்கும் போது வரும்-
பருக
இலைகளிருக்கும் போது வரும்-
இளைப்பாற-
இரைதேடி களைத்த பறவைகளும் வந்தமரும்
நிழலாட-
வானம்பாடிகள் நிலவொளியில் தன் இணைக்கான
வசந்த ராகங்களை வாசிக்கும்-
-----------------------------------------------------
இலைகளில்லாத மரங்கள்
செல்வாக்கில்லாத மனிதர்கள்-
செல்லாக்காசாகி விடுகிற சுபாவத்தில்.
--------------------------------------------------
காகம் வந்து அமர்ந்தது-
இரவு சாயும் போது-
காகம் எண்ணி விட்டது-
அந்த இரவை அந்த மரத்திலேயே கழிப்பது என்று-
இரவுக்கும்-
மரத்திற்கும்-
காகம் மட்டுமே துணை-
மரம் எண்ணிப் பார்க்கலாம்- தேடிப்பார்க்கலாம்-
------------------------------------------------
தன் வசந்தகாலத்தில்
தன் பழங்களைப் பறிக்க யாரேனும் வருகிறார்களா என்று-
பறவைகளேதும் வருமா
பேச்சுத் துணைக்கு என்று.
----------------------------------------------
பாவம் இந்தக் காகம்-
இது பழங்களையும் தின்றதில்லை-
நிழல் தேடியதும் இல்லை.
காகங்களின் பார்வை
வானத்தை நோக்கியில்லாமல்-
தரையை நோக்கியே தாழும்
எதார்த்தம் அவற்றின் பார்வையில் உண்டு
------------------------------------------------
மனிதர்கள் சுவைத்து சுவைத்து
சப்பிப்போனவற்றை
எறிந்தபோது தேடித்தேடித் தின்றவை-
பறவைகள் தூக்கி எறிந்த, உதறிப்போன
மரத்தைத் தேடி வந்திருக்கிறது.
காகம் - பாவம் தேடியிருக்கும்-
ஏதும் அகப்படாததால் மெதுவாக
இம்மரத்தில் இறங்கியிருக்கும்-
இந்த இரவு முழுவதும்
மரமும், காகமும் பேசட்டும்-
தங்கள் தனிமையை, சோகத்தை.......
இரவும் தன் ஆத்மாவுக்குள் ஒளிந்திருக்கும் ஓராயிரம் கதைகளை
அவற்றிடம் பகிர்ந்து கொள்ளட்டும்.
------------------------------------------------------
(தூறல்வரும்)