முகத்தில் தெளித்த சாரல்...
திருப்பத்தூர்:
வட ஆர்க்காடு மாவட்டம் திருப்பத்தூர் அருகே, திருப்பத்தூர்-ஜோலார்பேட்டை ரயில்நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக விடுதலைப்புலிகள் பெயரில் வந்த மிரட்டலையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் ரயில் நிலைய மாஸ்டருக்கு இந்த மிரட்டல் கடிதம் வந்தது. செவ்வாய்க்கிழமைஇந்தக் கடிதம் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர்-ஜோலார்பேட்டை ரயில்நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும்,அப்பகுதியில் வரும் ரயில்கள் வெடி வைத்துத் தகர்க்கப்படும் என்றும் கடிதத்தில்கூறப்பட்டிருந்தது.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து திருப்பத்தூர் போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது.இதையடுத்து போலீஸார், மோப்ப நாய் சகிதம் வந்து வெடிகுண்டு சோதனையில்ஈடுபட்டனர். புதன்கிழமை காலை வரை அப்பகுதி முழுவதிலும் சோதனை நடந்தது.இருப்பினும் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.