For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

பிஜியில் ராணுவ வீரர்கள் புரட்சிக்காரர்கள் இடை-யே அடி-த-டி

சுவா:

பிஜித் தீவில் பிரதமர் மகேந்திர பால் செளத்ரி சிறை வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே ராணுவ வீரர்களுக்கும்,புரட்சிக்காரர்களுக்கும் இடையே, கைகலப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்திலிருந்து புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் மற்றும் 40 புரட்சிக்காரர்களும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தைவிட்டு வெளியே வந்தனர். நாடாளுமன்ற வாசலில் நின்று கொண்டிருந்த ராணுவ வீரர்களுடன் கைகுலுக்கினார். பின்னர் காவா என்ற போதைப் பானத்தைசிறிது அருந்தினர்.

அப்போது, நாடாளுமன்றத்திற்குள்ளே இருப்பவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கும் கார் ஒன்று வந்தது. இதையடுத்து சாலையில் இருந்த தடுப்புகளைஜார்ஜ் உள்பட புரட்சிக்காரர்கள் அகற்றத் துவங்கினர். அப்போது அவர்களுக்கும், ஒரு ராணுவ வீரருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில்அங்கிருந்த வேலி பிய்த்து எறியப்பட்டது.

மோதலின்போது புரட்சிக்காரர்களில் ஒருவர், ராணுவ வீரரின் மார்பில் துப்பாக்கியை வைத்து, பிஜி மொழியில் திட்டினார். இதையடுத்து ராணுவ அதிகாரிஅய்சாகே தெளலகோ புரட்சிக்காரர்களைப் பார்த்து ஆவேசமாக சத்தமிட்டார். இரு தரப்பினரும், மாறி, மாறி துப்பாக்கிகளை வைத்து மிரட்டிக்கொண்டனர்.

இந்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு எதுவும் நடத்தப்படவில்லை. மோதலையடுத்து ஸ்பீட், ராணுவ வீரர்களிடம் மீண்டும் கைகுலுக்கி விட்டு தனதுஆட்களைக் கூட்டிக் கொண்டு உள்ளே திரும்பினார்.

ராய்ட்டர்ஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X