பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: காயங்-க-ளு-டன் களம் காணும் வீராங்கனைகள்
பாரீஸ்:
டென்னிஸ் கிரான்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் போட்டியில் இந்த ஆண்டு மகளிர் பிரிவில் பலமுன்னணி வீராங்கனைகள் காயமடைந்த நிலையில் இருப்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்றஎதிர்பார்ப்பு உள்ளது.
மே 29-ம் தேதி பாரீஸில் இந்த ஆண்டின் இரண்டாவது கிரான்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்போட்டி துவங்கவுள்ளது. பல வீராங்கனைகள் காயமடைந்த நிலையில் களம் இறங்குகிறார்கள். எனவே இறுதிப்போட்டியில் பெரிய வீராங்கனைகள் யாரும் இடம் பெற்றால் அது ஆச்சரியம்தான்.
முதல் நிலை வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸ், இந்த மாத இறுதியில் ரோமில் நடந்த போட்டியின்போது கால் வலிகாரணமாக விலகினார். இரண்டாவது நிலை வீராங்கனை லிண்ட்சே டேவன்போர்ட், முதுகு வலி காரணமாக ரோம்போட்டியிலிருந்து வெளியேறினார். இதே போல மாட்ரிட் போட்டியிலும் அவர் விளையாடவில்லை.
எட்டாவது நிலை வீராங்கனையும், அமெரிக்க ஓபன் சாம்பியனுமான செரீனா வில்லியம்ஸ், முழங்கால் வலியால்அவதிப்படுகிறார். கடந்த ஆறு வாரமாக அவர் போட்டிகள் எதிலும் பங்கற்ேகவில்லை. இதேபோல, செரீனாவின்சதோதரியும், நான்காவது நிலை வீராங்கனையுமான வீனஸ் வில்லியம்ஸும், கை மணிக்கட்டில் உள்ள வலியால்அவதிப்படுகிறார்.
12-வது நிலை வீராங்கனை ஆங்கே ஹியூபரும் சரியாக இல்லை. தசைப் பிடிப்பு காரணமாக ஸ்டராஸ்போர்க்போட்டியில் அவர் விளையாடவில்லை. அன்ன கோர்னிகோவாவும், கணுக்கால் வலி காரணமாக ரோம்போட்டியிலிருந்து எதிலுமே கலந்துகொள்ளவில்லை.
காயமடைந்திருந்தாலும் மனதளவில் மார்ட்டினா ஹிங்கிஸ் உறுதியாக இருப்பதாகவே கூறியுள்ளார். கடந்தஆண்டு பிரெஞ்சு ஓபன் போட்டியின்போது இறுதிப் போட்டியில் ஸ்டெபி கிராபுடன் மோதி அவர் தோல்வியுற்றார்.இதனால் விரக்தியில், பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. தாயார் வற்புறுத்திய பிறகே அவர் கலந்துகொண்டார். இதனால் அவருக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டது. அதைத் துடைக்கும் வகையில் இம்முறை பட்டத்தைவெல்ல முயற்சிப்பார் என நம்பலாம்.
யு.என்.ஐ.