For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"டாக்காவிலிருந்து வரட்--டும்": கபில், அசா-ருக்-கா-க காத்-தி-ருக்-கி-ற-து சிபிஐ

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

கிரிக்கெட் சூதாட்டம் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் கபில் தேவ், அசாருதீன் ஆகியோரிடம் சிபிஐவிசாரணை நடத்தவுள்ளது.

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள்துவங்குகின்றன. ஜூன் 7-ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன. ஆசியக் கோப்பை முடிந்து இந்திய அணிதாய்நாடு திரும்பிய பிறகு கபில் தேவ் மற்றும் அசாருதீனிடம் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ அதிகாரிகள்தெரிவித்தனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் நடைபெற்ற சிங்கர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்குஎதிரான ஆட்டத்தில் திறமைக்கும் குறைவாக விளையாடும்படியும், அதற்கு ரூ.25 லட்சம் தருவதாகவும் கபில் தேவ்தன்னிடம் கூறியதாக மனோஜ் பிரபாகர் குற்றம் சாட்டியுள்ளார்.

மூன்று ஆண்டுகளாகவே இந்த குற்றச்சாட்டைக் கூறி வந்த பிரபாகர் கபில் தேவின் பெயரை மட்டும்தெரிவிக்கவில்லை. ஆனால், கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சிபிஐ விசாரணை மற்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியத்தின் நெருக்குதல் ஆகியவை காரணமாக இரு நாட்களுக்கு முன் பத்திரிகையாளர் கூட்டத்தில் கபில்தேவின் பெயரை பிரபாகர் தெரிவித்தார். தான் கூறியது உண்மைதான் என்பதற்கு ஆதாரமாக கவாஸ்கர், ரவிசாஸ்திரி, சித்து, அசாருதீன் உள்ளிட்ட சில வீரர்களின் பெயரை பிரபாகர் வெளியிட்டார்.

பிரபாகர் குறிப்பிட்ட வீரர்களில் கபில் தேவ் மற்றும் அசாருதீன் மட்டுமே இப்போது இந்திய அணியில் உள்ளனர்.மற்றவர்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இதையடுத்து, டாக்காவிலிருந்து திரும்பிய பிறகுதான்அசாருதீன் மற்றும் கபில் தேவிடம் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியஅணி ஞாயிற்றுக்கிழமை டாக்கா செல்கிறது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X