For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
லாரி கவிழ்ந்து 15 பேர் சாவு
ஹைதராபாத்:
லாரி கவிழ்ந்து அதில் பயணம் செய்த 15 பேர் இறந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் காவலூர் கிராமத்தில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங் அருகேசனிக்கிழமை அதிகாலை இவ் விபத்து நடந்தது. விபத்தில் இறந்தவர்களில் 8 பேர் குழந்தைகள், 3 பேர் பெண்கள்என்று போலீஸார் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான லாரியில் மணல் ஏற்றப்பட்டிருந்தது. அதன் மீது 35 பேர் பயணம் செய்துள்ளனர். லெவல்கிராசிங் அருகே ஒரு வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
காயமடைந்தவர்கள் நெல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு உயர் போலீஸ்அதிகாரிகள் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
யு.என்.ஐ.
Story first published: Saturday, May 27, 2000, 5:30 [IST]