தமிழகத்தில் இன்று
ப்ரீடவுன்:
சியர்ரா லியோனில் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த மேலும் 143 ஐ.நா. அமைதி காக்கும் படையினர்விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் டேவிட் விம்ஹர்ஸ்ட் இதுகுறித்துக் கூறுகையில்,விடுவிக்கப்பட்ட 143 அமைதி காக்கும் படையினும், லைபீரியாவிலிருந்து சனிக்கிழமை சியர்ரா லியோன்தலைநகர் ப்ரீடவுனுக்கு வந்து சேர்ந்தனர். புரட்சிகர ஐக்கிய முன்னணி தீவிரவாத அமைப்பிடம் 112 பேர் இன்னும்பிணைக் கைதிகளாக உள்ளனர்.
விரைவில் இவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்புகிறோம். அனைத்து அமைதி காக்கும்படையினும் விடுவிக்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறோம் என்றார்.
தீவிரவாதிகளின் கை சியர்ரா லியோனில் ஓங்கியதையடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைசியர்ரா லியோன் தலைநகர் ப்ரீடவுனுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் 500-க்கும் மேற்பட்ட அமைதி காக்கும்படையினரை சங்கோ என்பவரின் தலைமையிலான தீவிரவாதிப் படையினர் பிடித்து வைத்துக் கொண்டனர்.இவர்களை மீட்பதற்காக லைபீரிய அதிபர் தலைமையில் ஐ.நாடு. சபை பேச்சு நடந்தி வந்தது.
மேலும் படைகள் விரைவு:
இந்த நிலையில் சியர்ரா லியோனுக்கு மேலும் கூடுதல் படைகளை ஐக்கிய நாடுகள் சபை அனுப்புகிறது. அடுத்த சிலநாட்களில் மேலும் 3000 அமைதி காக்கும் படையினர் சியர்ரா லியோனுக்கு அனுப்பப்படுவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.