தமிழகத்தில் இன்று
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் அருகே, மேலும் எழுபது அகதிகள் நடுக்கடலில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையில் போர் உச்சகட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்க, அகதிகள் வருகை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இலங்கையில் இருந்துபடகுகளில் தப்பிவரும் அகதிகளை, படகுகாரர்கள் நடுக்கடலில் இருக்கின்ற மணற்திட்டுகளில் இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர். இவ்வாறுவிட்டுச் சென்றவர்களை ராமநாதபுரம் மாவட்ட அதிகாரிகள் மீட்டுவந்து அகதிகள் முகாமில் சேர்க்கின்றனர்.
சனிக்கிழமை இரவு மேலும் எழுபது அகதிகள். 5-ம் தீவில் உள்ள மணற் திட்டுக்களில் இறக்கி விடப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.அகதிகளாக படகில் தப்பிவருபவர்கள் தங்களுடன் , உணவோ , குடிநீரோ எடுத்துவருவது இல்லை. இவர்களும் உணவு குடிநீர் இல்லாமல்தவித்துக்கொண்டிருப்பார்கள் என்று கருதப்படுகிறது. 5-ம் தீவீல் இருக்கும் 70 அகதிகளையும் மீட்டுக்கொண்டு வர மாவட்ட நிர்வாகத்தினர்தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.