தமிழகத்தில் இன்று
கோவை:
கொங்குவேளாளக் கவுண்டர் பேரவை அரசியல் கட்சி துவக்க முடிவு செய்துள்ளது.
கோவையில் சாஃப்ட் வேர் பூங்கா துவங்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூரில் நேற்று மாலை கொங்குவேளாளக் கவுண்டர் பேரவையின் மா-நில செயற்குழுக் கூட்டம் -நடந்தது.பேரவையின் கோவை மாவட்டத் தலைவர் ராஜாமணி தலைமை வகித்தார்.
கூட்டத்திற்கு பின் பேரவையின் மாநிலத் தலைவர் தேவராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:
ஏற்கனவே கொங்குவேளாளக் கவுண்டர்கள் துவக்கிய தமிழ்தேசியக் கட்சி சரிவர செயல்படவில்லை. எனவேகொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை புதிய கட்சி ஒன்றைத் துவக்க -முடிவு செய்துள்ளது.
பழநியில் வரும் ஜூலை 30ம் தேதி திண்டுக்கல் மாவட்ட கொங்குவேளாளக் கவுண்டர் பேரவை செயற்குழுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னம் முடிவு செய்யப்படும்.
கொங்குவேளாளக் கவுண்டர்கள் அதிகம் வசிக்கும் கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல் ஆகியமாவட்டங்களில் இக்கட்சி அதிகம் கவனம் செலுத்தும்.
ஏற்கனவே, அகில இந்திய அளவில் கொங்குதேசம் என்ற கட்சியைத் துவங்கிய -முன்னாள் எம்.பி, சி.கே குப்புசாமிஇக்கட்சியைக் கலைத்து விட்டு தற்போது பேரவையில் சேர்ந்துள்ள இவர், மா-நிலத் துணைத் தலைவராகப்பொறுப்பேற்றுள்ளார். பொருளாளராக -மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
சாதி வாரியாக கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும். கொத்தடிமைச் சட்டங்கள் தவறாகப்பயன்படுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும். சாதிவாரியக் கணக்கெடுப்பால் சரியான விகிதத்தில் இட ஒதுக்கீடு-முறையை அமல்படுத்த -முடியும், இலங்கைத் தமிழர்களுக்கு பாதகமான முடிவுகளை இந்தியா மேற்கொள்ளக்கூடாது.
கோவையிலிருந்து ஆண்டுக்கு 27 கோடி ரூபாய் அளவிற்கு கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் ஏற்றுமதி செய்யப்படுகிறது.எனவே, கோவையில் ஒரு சாஃப்ட்வேர் பூங்காவை அரசு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு தேவராஜ் கூறி-னார்.