ஒலிம்பிக் போட்டியைப் புறக்கணிப்போவதாக சர்வதேச டி.வி. நிறுவனங்கள் எச்சரிக்கை
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக் போட்டியில், விளையாட்டு மைதானங்களுக்கு வெளியே படப்பிடிப்போ, வீரர் மற்றும்வீராங்கனைகளுடன் பேட்டியோ எடுப்பது தொடர்பான கடும் விதிகளை போட்டி ஏற்பாட்டாளர்கள் மாற்றிக்கொள்ளவில்லை என்றால் ஒலிம்பிக் போட்டியை புறக்கணிப்போம் என்று சர்வதேச ஒளிபரப்பு நிறுவனங்கள்எச்சரித்துள்ளன.
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் துவங்குகின்றன.இப் போட்டிகளை ஒளிபரப்ப என்.பி.சி. நிறுவனத்துக்கு ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழுமம் அனுமதிவழங்கியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை ஒளிபரப்பு உரிமம் பெற என்.பி.சி. நிறுவனம் ரூ.3075 கோடிவழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் போட்டி தொடர்பான அனைத்தையும் ஒளிபரப்ப என்.பி.சி. நிறுவனத்துக்கு மட்டுமே உரிமை உள்ளது.ஆனால் சி.என்.என்., இ.எஸ்.பி.என்., பாக்ஸ் போன்ற சர்வதேச ஒளிபரப்பு நிறுவனங்கள், ஒலிம்பிக் போட்டிகள்நடைபெறும் ஸ்டேடியங்களுக்கு வெளியே வீரர், வீராங்கனைகள் போன்றவர்களிடம் பேட்டி எடுக்கவாய்ப்புள்ளது. அப்படி அந் நிறுவனங்கள் பேட்டி எடுத்தால், என்.பி.சி. நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படும். இதைக்கருத்தில் கொண்டு கடுமையான விதிமுறைகளை ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழமம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஒரு நாளைக்கு 8 சர்வதேச ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே குலுக்கல் முறையில் தேர்வு செய்துஅனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சர்வதேச ஒளிபரப்பு நிறுவனங்கள் கடும் எதிர்ப்புத்தெரிவித்துள்ளன. இந்த விதிமுறையை ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழுமம் மாற்றிக் கொள்ளவேண்டும்.இல்லையென்றால் முழுவதுமாக ஒளிம்பிக் போட்டியை ஒளிபரப்புவதைப் புறக்கணிப்போம் என்று அவைஎச்சரித்துள்ளன.
இப்படி கடுமையான கட்டுப்பாடுகளின் மூலம் பத்திரிகை மற்றும் டிவிக்களின் உரிமையில் ஒலிம்பிக்ஒருங்கிணைப்பாளர்கள் தலையிடமுடியாது. இது ஒலிம்பிக் போட்டி ஒளிபரப்பை கடுமையாகப் பாதிக்கும்.குறிப்பாக, வட அமெரிக்கப் பகுதியில் ஒலிம்பிக் போட்டிகள் ஒளிபரப்பு இருக்காது என்று யு.எஸ்.ஓ.சி. என்றஒளிபரப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மைக் மோரன் தெரிவித்தார்.