கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுடன் அஜய் சர்மாவுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது - சிபிஐ
டெல்லி:
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், டெல்லி கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான அஜய் சர்மாவுக்கு, கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுடன்நெருங்கிய தொடர்பு உள்ளது என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும், கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி சிபிஐ விசாரித்து வருகிறது. இது தொடர்பாக,குற்றச்சாட்டுகள் கூறியவர்களிடம் சிபிஐ விசாரித்து வருகிறது.
அஜய் சர்மா மீது கடுமையாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் பற்றி விசாரித்ததில், கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கும் அவருக்கும் நெருங்கியதொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இத்தகைய ஆதாரங்கள் அவர் மீது வழக்குத் தொடர போதுமானவையாக உள்ளன. தற்போது அவர் இங்கிலாந்தில் உள்ளார். அவர் இந்தியாதிரும்பியவுடன் அவருக்கும் கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி விசாரிக்கப்படும் என்று சிபிஐ அதிகாரிகள்தெரிவித்தனர்.
அஜய் சர்மா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், மற்ற கிரிக்கெட் வீரர்கள் மீதானகுற்றச்சாட்டுகளுக்கு விரைவில் பல புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று கருதப்படுகிறது.
யு.என்.ஐ.